Monday, May 30, 2011

அருள்மிகு எம்.ஜி.ஆர். ஆலயம் - படம்.


மறைந்த தமிழக முன்னாள் முதலமைச்சரும் புகழ்பெற்ற நடிகருமான எம்.ஜி.ஆருக்கு தமிழகம் முழுவதிலும் பல ஊர்களில் கோயில்கள் உள்ளன.

சென்னையில் பெரம்பூரில் அருள்மிகு எம்.ஜி.ஆர். ஆலயம் உள்ளது. தற்போது திருநின்றவூரில் அருள்மிகு எம்.ஜி.ஆர் ஆலயம் அமைக்கப்பட்டுள்ளது.

திருநின்றவூர் நத்தம் மேடு கிராமத்தில் உள்ள செல்லியம்மன் சாலையில் கோவில் கட்டப்பட்டு உள்ளது. 1800 சதுர அடி மனையில் இந்த கோவில் அமைக்கப்பட்டுள்ளது. பூமி பூஜை செய்து அருள்மிகு எம்.ஜி.ஆர். ஆலயத்தை எழுப்பி உள்ளனர்.

இந்த கோவிலுக்குள் எம்.ஜி.ஆர். உருவப்படம் வைக்கப்பட்டுள்ளது. கோவிலுக்குள் நிர்மானிக்க எம்.ஜி.ஆரின் உருவச்சிலை தயாராகி வருகிறது. 5 அடி உயரத்தில் இந்த சிலை உருவாகிறது. ராஜஸ்தான் மாநிலத்தில் கைதேர்ந்த சிற்பிகள் இச்சிலையை செய்து வருகின்றனர்.

பக்தர்கள் கோவிலுக்குள் வந்து அபிஷேகம் செய்வதற்காக 2 அடி உயரம் கொண்ட கருங்கல் சிலையும் தயாராகிறது. இரண்டு மாதத்தில் இந்த சிலைகள் கோவிலுக்குள் நிர்மானிக்கப்பட்டு கும்பாபிஷேகம் நடத்தப்படுகிறது.

எம்.ஜி.ஆர் கோவிலை சென்னை புதுப்பேட்டையை சேர்ந்த கலைவாணன் அவரது மனைவி சாந்தி ஆகியோர் கட்டி உள்ளனர்.

இது குறித்து கலைவாணன், ‘’சிறு வயதில் இருந்தே நான் தீவிர எம்.ஜி.ஆர். ரசிகன். அவரை தெய்வமாக நினைத்து வீட்டில் தினமும் உருவப்படத்துக்கு பூஜை செய்து வருகிறேன். பின்னர் கோவில் கட்டவும் முடிவு செய்தேன். அது தற்போது நிறைவேறியுள்ளது’’ என்றார்.

No comments: