Monday, May 30, 2011

2ஜி ஸ்பெக்ட்ரம் வழக்கு : கரிம் மொரானி ஜாமீன் மனு தள்ளுபடி,


2ஜி வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள சினியுக் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் கரிம் மொரானியின் ஜாமின் மனுவை தள்ளுபடி செய்து டில்லி சி.பி.ஐ., சிறப்பு கோர்ட் உத்தரவிட்டுள்ளது.

2ஜி ஸ்பெக்ட்ரம் முறைகேட்டில் ஆதாயம் பெற்ற ஸ்வான் டெலிகாம்ஸ் நிறுவனம். அதன் ஒரு அங்கமான சினியுக் நிறுவனம் வாயிலாக கலைஞர் டி.வி.,க்கு ரூ.214 கோடி பணத்தை பரிவர்த்தனை செய்தது என்பது சி.பி.ஐ., யின் குற்றச்சாட்டு. இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட கரிம் மொரானி ஜாமின் கோரி டில்லி சி.பி.ஐ., சிறப்பு கோர்ட்டில் மனு தாக்கல் செய்திருந்தார்.

அவரது மனுவை கடந்த 23ம் தேதியன்று டில்லி ஐகோர்ட் தள்ளுபடி செய்தது. இந்நிலையில் அவர் டில்லி சி.பி.ஐ., கோர்ட்டில் தாக்கல் செய்த ஜாமின் மனு மீதான விசாரணையை 30ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

அதன்படி இன்று நடைபெற்ற ஜாமின் மனு மீதான விசாரணையில் ஜாமின் மனுவை தள்ளுபடி செய்து சி.பி.ஐ., கோர்ட் உத்தரவுவிட்டது. மேலும் அவரை 14 நாள் நீதிமன்ற காவலில் வைத்து விசாரிக்கவும் உத்தரவிட்டுள்ளது இதனையடுத்து கரிம் மொரானி திகார் சிறையில் அடைக்கப்படுகிறார்.

No comments: