Monday, May 30, 2011

ஏற்காடு கோடை விழா மலர்கண்காட்சி நிறைவு.


ஏழைகளின் ஊட்டி என்றழைக்கப்படும் ஏற்காட்டில் நேற்று முன்தினம் கோடை விழா மலர்கண்காட்சி தொடங்கியது. கண்காட்சியை யொட்டி சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் அண்ணாபூங்காவில் பல ஆயிரம் பூந்தொட்டில் பல வகையான லட்சக்கணக்கான மலர்கள் பூத்து குலுங்குகின்றன.

இதை காண தமிழகம் மட்டுமின்றி பக்கத்து மாநிலங்களில் இருந்தும் ஏராளமான சுற்றுலாபயணிகள் வந்திருந்தனர். அவர்கள் ஏற்காட்டில் நிலவிவரும் சீதோஷ்ண நிலையை அனுபவித்தனர். ஏற்காடு பகுதியில் உள்ள அனைத்து சுற்றுலா தலங்களிலும் மக்கள் கூட்டம் அலைமோதியது. அவர்கள் இயற்கை அழகை ரசித்து குடும்பத்துடன் போட்டோ எடுத்துக் கொண்டனர்.

நேற்று சுற்றுலா பயணிகளை மகிழ்விக்க பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டது. கபடி போட்டி, கோலப்போட்டி, இசை நாற்காலி, படகு போட்டி, நாய் கண்காட்சி உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டது. இந்த கண்காட்சியில் பல இனங்களை சேர்ந்த அரிய வகை நாய்கள் பங்கேற்று பார்வையாளர்களை மகிழ்வித்தது.

முன்னதாக காலையில் கிரிக்கெட் போட்டி நடத்தப்பட்டது. தொடர்ந்து தவழும் குழந்தைகள் போட்டி, கொழு கொழு குழந்தைகள் போட்டி, கல்லூரி மாணவர்களின் பல்சுவை நிகழ்ச்சிகள் நடந்தது.

தொடர்ந்து மாலை 4 மணிக்கு கோடை விழா நிறைவு விழா ஏற்காடு திரையரங்கத்தில் நடந்தது.

No comments: