Monday, May 30, 2011

ஸ்பெக்ட்ரம் விவகாரம் : பாராளுமன்ற குழு முன்பு தணிக்கை அதிகாரி ஆஜர் ; ரூ. 1.76 லட்சம் கோடி இழப்பு பற்றி விளக்கம்.


ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில் முறைகேடுகள் நடந்ததால் மத்திய அரசுக்கு ரூ. 1.76 லட்சம் கோடி இழப்பு ஏற்பட்டதாக மத்திய கணக்கு தணிக்கைத்துறை தகவல் வெளியிட்டது. கணக்கு தணிக்கைத் துறையின் அறிக்கையில் பெரிய சர்ச்சை எழுந்தது.

ஸ்பெக்ட்ரம் விவகாரம் குறித்து சுப்ரீம் கோர்ட்டின் நேரடி கண்காணிப்பில் சி.பி.ஐ. விசாரணை நடத்தி வருகிறது. அமலாக்கப்பிரிவு, பாராளுமன்ற பொது கணக்குக்குழு ஆகியவையும் விசாரணை நடத்தி வருகின்றன. இதற்கிடையே எதிர்க்கட்சிகளின் போராட்டம் காரணமாக ஸ்பெக்ட்ரம் இழப்பு குறித்து உண்மையை கண்டறிய பாராளுமன்ற இருசபைகளின் கூட்டுக்குழுவும் விசாரணை நடத்தி வருகிறது.

இந்த குழுவுக்கு காங்கிரஸ் கட்சி எம்.பி. சாக்கோ தலைவராக உள்ளார். கூட்டுக்குழு தனது விசாரணையை தீவிரமாக நடத்தி வருகிறது. இந்த விசாரணைக்கு வருமாறு மத்திய கணக்கு தணிக்கைத் துறை அதிகாரிக்கு கூட்டுக்குழு உத்தரவிட்டிருந்தது. அதை ஏற்று இன்று காலை கூட்டுக்குழு முன்பு மத்திய கணக்கு தணிக்கைத்துறை தலைவர் வினோத்ராய் ஆஜரானார்.

அவரிடம், கூட்டுக்குழுவில் இடம் பெற்றுள்ள உறுப்பினர்கள் பல்வேறு கேள்வி களை எழுப்பினார்கள். குறிப்பாக ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு முறைகேட்டில் ரூ. 1.76 லட்சம் கோடி இழப்பு ஏற்பட்டதாக, எந்த அடிப் படையில் கணிக்கப்பட்டது என்று கேட்டனர். அதற்கு மத்திய கணக்கு தணிக்கைத்துறை அதிகாரி வினோத்ராய் விளக்கம் அளித்தார்.

1998-ம் ஆண்டு முதல் 2009-ம் ஆண்டு வரை ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு செய்யப்பட்ட விதத்தை எடுத்துக் கூறிய அதிகாரி வினோத்ராய், ஊழல் நடந்ததற்கான ஆதாரங்களையும் விளக்கமாக கூறினார். அவரது விளக்கத்தை கூட்டுக்குழு பதிவு செய்தது. தணிக்கை அதிகாரி கொடுத்த தகவல்களை அடிப்படையாகக் கொண்டு அறிக்கை ஒன்றை கூட்டுக்குழு தயாரிக்கும்.

அந்த அறிக்கை பாராளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படும். இந்த ஆண்டு தொடக்கத் தில் தணிக்கை அதிகாரி வினோத்ராய் பாராளுமன்ற பொது கணக்குக்குழு முன்பும் ஆஜராகி, ரூ. 1.76 லட்சம் கோடி இழப்பு தொடர்பாக விளக்கம் அளித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments: