Monday, May 30, 2011

மரியம் பிச்சை மரணத்திற்கு காரணமான லாரி டிரைவர் பிடிபட்டார்.


அமைச்சர் மரியம் பிச்சை மரணத்திற்கு காரணமான லாரி பிடிபட்டது. லாரி டிரைவரும் பிடிபட்டான். லாரி உரிமையாளரையும் கைது செய்து விசாரணை செய்ய போலீஸ் முடிவு செய்துள்ளது.

சென்னையில் எம்.எல்.ஏ.,க்கள் பதவியேற்பு விழாவிற்காக அமைச்சர் மரியம்பிச்சை, திருச்சியில் இருந்து காரில் கடந்த 23ம் தேதி சென்றபோது, பாடாலூர் அருகே காரும், லாரியும் மோதி விபத்திற்குள்ளானது.

இந்த விபத்தில் அமைச்சர் சம்பவ இடத்திலேயே பலியானார். இந்த விபத்தில் மர்மம் இருப்பதால், சி.பி.சி.ஐ.டி., போலீசார் விசாரிக்க முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டார்.

கூடுதல் டி.ஜி.பி., அர்ச்சனா ராமசுந்தரம் தலைமையில் விசாரணை நடந்தது. சாலையின் சோதனைச் சாவடியில் பொருத்தப்பட்டுள்ள சுழல் காமிராவில் பதிவான, லாரிகள் குறித்த விபரங்களை சேகரித்தனர்.அதன் அடிப்படையில் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.

தமிழ்நாட்டில் இருந்து தப்பிச்சென்ற லாரியை மேற்கு வங்கத்தில் மடக்கிப் பிடித்தனர் போலீசார். பிடிபட்ட லாரியை மேற்கு வங்கத்தில் இருந்து சென்னைக்கு கொண்டு வருகின்றனர் பிசிஐடி போலீசார்.

மரியம் கார் மீது மோதிவிட்டு தப்பிச்சென்ற லாரி டிரைவரையும் போலீசார் கைது செய்தனர்.

லாரியின் உரிமையாளர் ஆந்திராவைச் சேர்ந்தவர் என்பது விசாரனையில் தெரிய வந்துள்ளது. அவரையும் கைது செய்து விசாரிக்க சிபிசிஐடி திட்டமிட்டுள்ளது.

No comments: