Saturday, April 16, 2011

இலங்கை வீரர்களை திருப்பி அழைப்பது நியாயமற்றது: முரளிதரன்.

இந்தியாவில் ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகளில் விளையாடி வரும் இலங்கை வீரர்களை மே 20-ம் தேதி நாடு திரும்புமாறு இலங்கை கிரிக்கெட் வாரியம் உத்தரவிட்டிருக்கிறது.

இந்த உத்தரவு நியாயமற்றது என்று பிரபல கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரன் கூறி்யுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

அவர், வீரர்களை திடீரென உடனடியாக திரும்பி வருமாறு அழைத்திருப்பது நியாயமற்ற செயல்.

இத்தகைய அறிவிப்பு இந்தியா-இலங்கை இடையேயான கிரிக்கெட் உறவை பாதிக்கும்.

இதனால் இலங்கை அணிக்கு பல்வேறு வழிகளில் நஷ்டம் வரலாம்.

எனவே, இப்பிரச்னையை மிகவும் கவனமுடன் அணுக வேண்டும்’’என்றும் கூறியுள்ளதாக அந்த இணையதளச் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


No comments: