Saturday, April 16, 2011

ஜெகன்மோகன் ரெட்டி 500 கோடி சொத்து குவித்தது எப்படி?


ஆந்திர மாநில முதல்வராக இருந்த ஒய்.எஸ்.ராஜசேகர ரெட்டி ஹெலிகாப்டர் விபத்தில் இறந்தார். அவரது மறைவுக்கு பின் மகன் ஜெகன் மோகன் ரெட்டி தீவிர அரசியலில் குதித்தார்.

கடப்பா தொகுதி எம்.பி.யாக இருந்த அவர் காங்கிரசுக்கு எதிராக செயல்பட்டதால் கட்சியில் இருந்து நீக்கப்பட்டார். இதனால் ஜெகன்மோகன் ரெட்டி எம்.பி. பதவியை ராஜினாமா செய்து புதிய அரசியல் கட்சியை தொடங்கினார்.

கடப்பா தொகுதியில் நடைபெறும் இடைத் தேர்தலில் ஜெகன்மோகன் ரெட்டி மீண்டும் போட்டியிடுகிறார். நேற்று முன்தினம் வேட்புமனு தாக்கல் செய்தார்.

இந்நிலையில் அதில் ஜெகன் மோகன் ரெட்டி தனக்கு ரூ.500 கோடி சொத்து இருப்பதாக குறிப்பிட்டு உள்ளார். இதன் மூலம் அவர் இந்தியாவிலேயே பெரிய பணக்கார அரசியல்வாதியாக திகழ்கிறார்.

மேலும் ஜெகன்மோகன் ரெட்டி 2004-ல் முதன் முதலில் கடப்பா தொகுதியில் போட்டியிட்டபோது ரூ.1.77 கோடியும், அடுத்து 2009-ல் ரூ.7.39 கோடியும் சொத்து இருந்ததாக குறிப்பிட்டு இருந்தார்.

தற்போது ரூ.500 கோடி சொத்து இருப்பதாக ஜெகன்மோகன் ரெட்டி கூறியிருப்பதால் இடையில் இவ்வளவு சொத்து எப்படி வந்தது என்று ஆந்திர அரசியல் கட்சிகள் கேள்வி எழுப்பி பிரச்சாரம் செய்து வருகின்றன.

இது குறித்து ஹைதராபாத்தில் இன்று செய்தியாளர்களிடம் பேசுகையில் இந்த கேள்வியை எழுப்பிய காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் துள்சி ரெட்டி, இவ்வளவு குறுகிய காலத்தில் ஜெகன் எப்படி இந்த அளவு சொத்து எப்படி சேர்த்தார் என்று ஒட்டு மொத்த மாநில மக்களும் அதிர்ச்சியடைந்துள்ளதாக கூறினார்


No comments: