Saturday, April 16, 2011

தலை இல்லாமல் தமிழக மீனவர் பிணம் தரை ஒதுங்கியது.


ராமநாதபுரம் மீனவர்கள் கட்ந்த 2ம் தேதி மீன் பிடிக்க சென்றபோது என்ன நடந்தது என்று தெரியாமல் இருந்தது. அவர்கள் கரை திரும்பவில்லை. மற்ற மீனவர்கள் தேடி வந்த நிலையில் கை,கால் இல்லாமல் மூன்று உடல்கள் இதுவரை கரை ஒதுங்கியுள்ளது.

மாரிமுத்து என்பவரின் உடல் மட்டும் காணவில்லை என்று பரிதவித்துக் கொண்டிருந்தனர். இந்த நிலையில் இன்று மாலை புதுக்கோட்டை மாவட்டம் மணமேல்குடி அருகே உள்ள புதுக்குடி ஓடாய்மடம் கடலோரத்தில் தலை இல்லாதல் அழுகிய நிலையில் ஆண் பிணம் கரை ஒதுங்கியுள்ளது. இது மாரிமுத்து உடல்தான் என்று ராமநாதபுரம் மீனவர்கள் அடையாளம் காட்டியுள்ளனர்.

மீனவ சங்க பிரமுகர் அருளானந்த இது குறித்து, ‘சில நாட்களுக்கு முன்பு இலங்கையில் தலை இல்லாமல் கால் இல்லாமல் கை இல்லாமல் பிணங்கள் இருப்பதாக தகவல்கள் வந்தன. அவைதான் இப்போதும் கரை ஒதுங்கியிருப்பதால், இலங்கையில் இருந்தது இந்த பிணங்கள்தான் என்று உறுதியாகிறது.

வயிற்று பிழைப்புக்காக கடலுக்கு மீன் பிடிக்கச்செல்கிறோம். ஆனால் சிங்கள கடற்படை தமிழக மீனவர்களை அடிக்கடி கொன்று குவிக்கிறது. இது வரை கொல்லப்பட்ட மீனவர்கள் எந்த ஒரு குற்றச்செயல்களிகும் ஈடுபட்டவர்கள் என்று இலங்கை கடற்படையால் சொல்ல முடியவில்லை.

சுட்டுக்கொல்லப்பட்ட மீனவர்களின் படகுகளில் இருந்து கடத்தல் பொருட்களோ, அல்லது வெடிபொருட்களோ இதுவரை சிங்கள கடற்படை எடுத்தது இல்லை. ஆனால் மனிதாபிமானம் அற்ற முறையில் இப்படி தமிழக மீனவர்களை கொல்வதை வழக்கமாக கொண்டிருக்கிறார்கள். எத்தனை போராட்டம் நடத்தியும் தேசம் எங்களை கண்டுகொள்ளவில்லை.

இந்திய அரசு எங்கள் மீது இரக்கம் காட்டினால் மட்டுமே தமிழக மீனவர்கள் காக்கப்படுவார்கள் என்று தெரிவித்தார்.


No comments: