Saturday, April 16, 2011

அரசு பணிகள் குறித்து அமைச்சர்கள் ஆய்வு செய்ய தடை இல்லை.

அரசு பணிகள் குறித்து அமைச்சர்கள் ஆய்வு    செய்ய தடை இல்லை;    தலைமை தேர்தல் கமிஷனர் தகவல்

தேர்தல் முடிவு வெளியாக ஒரு மாதம் உள்ளது எனவே அரசு பணிகளை நிறைவேற்ற தேர்தல் ஆணையம் அனுமதிப்பது குறித்து தீர்வு காண வேண்டும் என்று முதல்- அமைச்சர் கருணாநிதி கூறி இருந்தார். இதுகுறித்து தமிழக தலைமை தேர்தல் அதிகாரி பிரவீண்குமாரிடம் கேட்ட போது அவர் கூறியதாவது:-

இன்று சில வாக்குச் சாவடிகளில் மறு வாக்குப்பதிவு நடைபெறுகிறது. வாக்குப்பதிவு முடிந்த பிறகு, அமைச்சர்கள் அரசு பணி தொடர்பாக ஆய்வு கூட்டம் நடத்தலாம். அரசு பணிகள் குறித்து ஆய்வு செய்யலாம். தேர்தல் பணியில் ஈடுபட்டுள்ள மாவட்ட கலெக்டர்கள், தேர்தல் நடத்தும் அதிகாரிகள் இந்த ஆய்வு கூட்டத்தில் கலந்து கொள்ளக் கூடாது.

புதிய திட்டங்களை நடை முறைப்படுத்த முடியாது. என்றாலும் அவசர நடவடிக்கைகளை எடுப்பதற்கான அனுமதி வழங்குவது குறித்து தேர்தல் கமிஷன் நடவடிக்கை எடுக்கும். இதுகுறித்து ஓரிரு நாளில் முடிவு செய்து அறிவிக்கப்படும். தேர்தல் விதி மீறல் தொடர்பாக 62 ஆயிரம் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. தேர்தல் கணக்குகளை வேட்பாளர்கள் ஜூன் மாதம் 30-ந் தேதிக்குள் தேர்தல் ஆணையத்திடம் தாக்கல் செய்ய வேண்டும்.

இவ்வாறு பிரவீண்குமார் கூறினார்.


No comments: