Monday, April 18, 2011

போர்க்குற்றவாளி என்று கூறப்பட்டதால் இலங்கை அரசு அதிர்ச்சி: ஐ.நா. சபை மீது பாய்ச்சல்.

போர்க்குற்றவாளி என்று கூறப்பட்டதால் இலங்கை அரசு அதிர்ச்சி: ஐ.நா. சபை மீது பாய்ச்சல்

இலங்கையின் சிங்கள ராணுவம் கடந்த 2009-ம் ஆண்டில் விடுதலைப்புலிகளுக்கு எதிராக இறுதிகட்ட தாக்குதலை நடத்தியது. இந்த தாக்குதலில் அப்பாவி தமிழ் மக்கள் படுகொலை செய்யப்பட்டனர்.

சரண் அடைந்த மற்றும் பிடிபட்ட விடுதலைப்புலிகள் இயக்க தலைவர்கள் கொடூரமாக சித்திரவதை செய்து கொல்லப்பட்டனர். ஐ.நா. சபையும், மனித உரிமை மீறல் தடுப்பு அமைப்புகளும் இந்த போர் குற்ற நடவடிக்கைகளுக்கு கண்டனம் தெரிவித்து உள்ளன.

இலங்கை ராணுவத்தின் போர்க்குற்றம் பற்றி விசாரணை நடத்துவதற்காக 3 உறுப்பினர்கள் கொண்ட குழு ஒன்றை ஐ.நா. பொதுச்செயலாளர் பான் கி மூன் நியமித்து இருந்தார்.

இந்த குழுவின் அறிக்கையில், இலங்கையின் இறுதிப்போரில் மனித உரிமைகள் மீறப்பட்டு இருப்பதற்கும், ராணுவத்தினர் புரிந்த குற்றங்களுக்கும் உறுதியான ஆதாரங்கள் கிடைத்து இருப்பதாக குறிப்பிடப்பட்டு உள்ளது.
இது இலங்கை அரசுக்கு அதிர்ச்சியை அளித்து உள்ளது. அந்த அறிக்கையை ஏற்க முடியாது என்றும், பொய்யானது என்றும் கூறி உள்ளது. ஐ.நா. சபை குறிப்பிட்ட சில நாடுகளின் பகடை காயாக மாறிவிட்டது எனவும் குற்றஞ்சாட்டி உள்ளது.


No comments: