Monday, April 18, 2011

சென்னையில் 2013-ல் 6 நிமிடத்துக்கு ஒரு மெட்ரோ ரெயில் ஓடும்.

சென்னையில் 2013-ல் 6 நிமிடத்துக்கு ஒரு    மெட்ரோ ரெயில் ஓடும்;    1,276 பேர் பயணம் செய்யலாம்

சென்னை நகரின் போக்குவரத்து நெரிசலை சமாளிக்க மெட்ரோ ரெயில் திட்டம் கொண்டு வரப்பட்டது. இந்த திட்டத்தின்படி, முதலாவதாக வண்ணாரப் பேட்டையில் இருந்து அண்ணாசாலை வழியாக சென்னை விமான நிலையம் வரை ஒரு பாதையும், சென்டிரலில் இருந்து கோயம்பேடு வழியாக செயின்ட்தாமஸ் மவுண்டு வரை மற்றொரு பாதையும் அமைக்கப்படுகிறது.

இவற்றின் மொத்த நீளம் 45 கிலோ மீட்டர். இதில் 24 கி.மீ. சுரங்கப் பாதையாகவும், மீதம் உள்ள பகுதி உயர்த்தப்பட்ட பாதையாகவும் அமைகிறது.சென்டிரலில் இருந்து கோயம்பேடு வழியாக செயின்ட்தாமஸ் மவுண்டு வரை செல்லும் மெட்ரோ ரெயில் பாதையில், கோயம்பேடு பஸ்நிலையம் அருகில் இருந்து அமைக்கப்படும் உயர்த்தப்பட்ட பாதை பணி வேகமாக நடந்து வருகிறது.

கோயம்பேட்டில் இருந்து செயின்ட்தாமஸ் மவுண்டுக்கு அமைக்கப்படும் மெட்ரோ ரெயில் பாதை அமைக்கும் பணி வேகமாக முடியும் என்று எதிர் பார்க்கப்படுகிறது. எனவே, 2013-ல் கோயம்பேட்டில் இருந்து செயின்ட்தாமஸ் மவுண்டு வரை மெட்ரோ ரெயில் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. 2014-ல் சென்டிரல் ரெயில் நிலையத்தில் இருந்து அண்ணாநகர் கோயம்பேடு வழியாக செயின்ட்தாமஸ் மவுண்டு வரை மெட்ரோ ரெயில் ஓடும்.

இதே ஆண்டில் வண்ணாரப்பேட்டையில் இருந்து அண்ணாசாலை வழியாக விமான நிலையம் வரை அமைக்கப்படும் பாதையிலும் மெட்ரோ ரெயில் ஓடும். 2015-ல் 4 நிமிடத்துக்கு ஒரு ரெயில் ஓடும் வசதி ஏற்படும். 2016 முதல் 6 பெட்டிகள் கொண்ட மெட்ரோ ரெயில்கள் ஓடும். இதுதவிர புதிய பாதைகளும் உருவாக்கப்பட்டு மெட்ரோ ரெயில் திட்டம் விரிவாக்கப்படுகிறது.


No comments: