Monday, April 11, 2011

கலைஞர் தான் முதலமைச்சர் : சேலத்தில் நடிகர் நெப்போலியன் பிரசாரம்.

கலைஞர் தான் முதலமைச்சர்:மக்கள் தெளிவாக உள்ளனர்; சேலத்தில் நடிகர் நெப்போலியன் பிரசாரம்

சேலம் வடக்கு தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் ஜெயப்பிரகாஷ், தெற்கு தொகுதி தி.மு.க. வேட்பாளர் எஸ்.ஆர்.சிவலிங்கத்தை ஆதரித்து நடிகரும், மத்திய மந்திரியுமான நெப்போலியன் பிரசாரம் செய்து வாக்கு சேகரித்தார். இவரது பேச்சை திரளானோர் வந்து கேட்டு ரசித்தனர். அவர் பேசும் போது இடைஇடையே பாட்டுப்பாடினார். இதை பொதுமக்கள் கேட்டு ரசித்தனர். இந்த பிரசாரத்தில் அவர் பேசியதாவது:-
கலைஞர் மட்டும் தான் சொன்னதை செய்வார். இது மக்களுக்கு தெளிவாக தெரியும். தலைவர் கலைஞரை முதல்அமைச்சராக்க மக்கள் முடிவு எடுத்து விட்டார்கள். இதில் அவர்கள் தெளிவாக உள்ளனர். இதனால் மீண்டும் தலைவர் கலைஞர் ஆட்சி அமைவது உறுதி. இலவச திட்டங்களை தலைவர் கலைஞர் கொடுத்து மக்களை சோம்பேறி ஆக்குகிறார் என்கிறார்.

2ரூபாய்கு 1கிலோ அரிசி எப்படி தரமுடியும் என ஜெயலலிதா கூறி கலைஞர் அறிவித்த திட்டங்களை எல்லாம் கிண்டல் அடித்தார். ஆனால் இன்று நான் ஆட்சிக்கு வந்தால் 20கிலோ அரிசி இலவசமாக தருவேன் என்கிறார்.

இது மட்டும் எப்படி முடியும். ஏழைகள் நலன் காக்க பல திட்டங்களை தந்தவர் தலைவர் கலைஞர். அவர் முதலமைச்சராக உதய சூரியன், கை சின்னத்திற்கு வாக்களியுங்கள். இவ்வாறு அவர் கூறினார்.


No comments: