Saturday, April 9, 2011

தே.மு.தி.க. அங்கீகாரத்தை ரத்து செய்யக் கோரி ஐகோர்ட்டில் வழக்கு.


இந்திய ராணுவத்துக்கு எதிராக பேசிய தே.மு.தி.கவின் அங்கீகாரத்தை ரத்து செய்து உத்தரவிட வேண்டும் என, சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடரப்பட்டுள்ளது.

யூத் இந்தியா என்ற பத்திரிகையின் ஆசிரியர் ராஜன் என்பவர் தாக்கல் செய்துள்ள மனுவில்,

கடந்த மாதம் 24ஆம் தேதி ரிஷிவந்தியம் தொகுதியில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த தேமுதிக தலைவர் விஜயகாந்த்திடம், தேர்தல் வியூகம் குறித்து கேட்டபோது, கார்கில் போர் மற்றும் பாகிஸ்தான் உடனான மற்ற போர்களில் இந்திய ராணுவம் எந்த வியூகமும் வைத்துக்கொள்ளவில்லை என்று கூறியதாக அவர் தெரிவித்துள்ளார்.

இந்த பேச்சு இந்திய இறையாண்மைக்கும், அரசியல் சாசனத்திற்கும் எதிரானது என்றும், அதனால் தேமுதிக கட்சியின் தேர்தல் ஆணைய பதிவு அங்கீகாரத்தை ரத்து செய்ய வேண்டும் என்றும் அதில் கூறப்பட்டிருந்தது.

நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலில் அந்தக் கட்சியின் வேட்பாளர்கள் வெற்றி பெற்றால், முடிவை வெளியிடாமல் நிறுத்தி வைக்க வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார்

No comments: