Wednesday, August 3, 2011

2ஜி ஊழல் : ராசாவுக்கு ஒரு பைசாகூட கொடுத்ததில்லை - ரத்தன் டாடா மறுப்பு.



ராசாவின் தொகுதியான பெரம்பலூரில் மருத்துவமனை அமைக்க டாடா குழுமத்தில் இருந்து ரூ.20 கோடி பெறப்பட்டதாகக் கூறப்பட்டது.

செவ்வாய்க்கிழமை அன்று சிறையில் உள்ள ஸ்வான் டெலிகாமின் ஷாகித் பால்வா, தமிழ்நாட்டில் உள்ள மருத்துவமனைக்கு ரூ.20கோடி டாடா கொடுத்ததாகக் கூறியிருந்தார்.

2ஜி ஊழல் விவகாரத்தில் முன்னாள் அமைச்சர் ராசா எழுதிய கடிதம் குறித்து பதிலளிக்கையில் டாடா குழுமத்தின் தலைவர் ரத்தன் டாடா தான் ஒரு பைசாகூட ராசாவுக்கு கொடுத்ததில்லை என்று கூறியுள்ளார்.

நிறுவனத்தின் நிர்வாகக்குழுக் கூட்டத்தில் உறுப்பினர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போது அவர் இவ்வாறு கூறியுள்ளார். நீதிமன்றத்தில் ஒருவர் என்னவேண்டுமானாலும் கூறிவிட்டுச் சென்றுவிடலாம்; அதற்காக அவமதிப்பு வழக்கெல்லாம் போட முடியாது.

ராசாவுக்காக ஒரு பைசாகூடக் கொடுத்ததில்லை. மருத்துவமனைக்காகவே அந்தப் பணம் கேட்கப்பட்டிருந்தது. ஆனால், மருத்துவமனை கட்டப்படவில்லை; உபகரணங்கள் எதுவும் வாங்கப்படவில்லை... எனவே பணம் எதுவும் கொடுக்கப்படவில்லை என்றார் அவர்.

நீதிமன்றத்தில் பிரச்னையை திசை திருப்புவதற்காக இவ்வாறு சொல்லி இருக்கிறார்கள் என்றார் டாடா.

No comments: