Wednesday, August 3, 2011

ரூ.2500க்கு எம்.ஆர்.ஐ. ஸ்கேன் : மதுரை சரவணா ஆஸ்பத்திரியில் 03-08-2011 முதல் தொடக்கம்.

குறைந்த கட்டணத்தில் நோயாளிகளுக்கு சேவை: மதுரை சரவணா ஆஸ்பத்திரியில் எம்.ஆர்.ஐ. ஸ்கேன் சென்டர் நாளை முதல் தொடக்கம்

குறைந்த கட்டணத்தில் நோயாளிகளுக்கு சேவை செய்யும் நோக்கத்தில் சரவணா ஆஸ்பத்திரியில் எம்.ஆர்.ஐ. ஸ்கேன் சென்டர் திறக்கப்படுகிறது.

இதுகுறித்து மதுரை நரிமேட்டில் உள்ள சரவணா ஆஸ்பத்திரி நிறுவனர் டாக்டர் பி.சரவணன் கூறியதாவது:-

மதுரை சரவணா ஆஸ்பத்திரி பலதரப்பட்ட நோயாளிகளுக்கு சேவை நோக்கத்துடன் மருத்துவம் செய்து வருகிறது. இதன் மூலம் ஏழை- எளிய மக்கள் பலன் அடைந்து வருகிறார்கள். தென்தமிழகத்தில் எம்.ஆர்.ஐ. ஸ்கேன் வசதி குறைவாகவே உள்ளது. அதனை பூர்த்தி செய்யும் விதத்தில் மதுரை சரவணா ஆஸ்பத்திரியில் எம்.ஆர்.ஐ. ஸ்கேன் சென்டர் அமைக்கப்பட்டுள்ளது.

மருத்துவ உலகில் தசைப் பகுதிகள், தலை, தண்டுவடம் மற்றும் முக்கிய பகுதிகளில் உள்ள நோய்களை கண்டறிய எம்.ஆர்.ஐ. ஸ்கேன் அவசியமானதாகும். அதற்காக நோயாளிகள் ஆஸ்பத்திரியில் இருந்து ஸ்கேன் சென்டருக்கு அழைத்து செல்வதில் காலவிரையம் மற்றும் பணச்செலவுகளும் அதிகரிக்கிறது. இதனை கருத்தில் கொண்டு இந்த ஸ்கேன் சென்டர் திறக்கப்படுகிறது.

இங்கு எம்.ஆர்.ஐ. ஸ்கேன் எடுக்க நோயாளிகளிடம் ரூ.2500 மட்டுமே வசூலிக்கப்படும். இது மிக மிக குறைந்த கட்டணம் ஆகும். ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெறுபவர்கள் மட்டுமின்றி மற்ற நோயாளிகளும் குறைந்த கட்டணத்தில் ஸ்கேன் எடுத்து கொள்ளலாம். டெலிமெடிசன் மூலம் உடனுக்குடன் ஸ்கேன் ரிப்போர்ட் வழங்கப்படும்.

நோயாளிகள் வெகுநேரம் காத்திருக்க தேவையில்லை. இவ்வாறு டாக்டர் பி.சரவணன் கூறினார்.

எம்.ஆர்.ஐ. ஸ்கேன் சென்டர் திறப்பு விழா சரவணா ஆஸ்பத்திரியில் புதன்கிழமை 03-08-2100 காலை 9.30 மணிக்கு நடக்கிறது.

No comments: