Friday, June 17, 2011

சமச்சீர்கல்வியை புறக்கணித்த முதல் அமைச்சருக்கு நன்றி தெரிவித்து தனியார் பள்ளிகள் மாநாடு .

முதல் அமைச்சருக்கு நன்றி தெரிவித்து தனியார் பள்ளிகள் மாநாடு சென்னையில் நாளை நடக்கிறது

முதல் - அமைச்சர் ஜெயலலிதாவிற்கு நன்றி தெரிவித்து தனியார் பள்ளிகள் மாநாடு சென்னையில் நடத்தப்படுகிறது.

தமிழ்நாடு நர்சரி, பிரைமரி, மெட்ரிக்குலேசன், மேல்நிலைப்பள்ளிகள் சங்கத்தினர் சார்பாக முதல்- அமைச்சர் ஜெயலலிதாவிற்கு நன்றி தெரிவிக்கும் வகையில் தனியார் பள்ளிகள் வாழ்வுரிமை மாநாடு நாளை 18-ந்தேதி சனிக்கிழமை சென்னை வள்ளுவர் கோட்டம் அருகில் உள்ள வித்யோதயா மெட்ரிக் பள்ளியில் நடக்கிறது.

மாநாடு குறித்து மாநில பொதுச்செயலாளர் கே.ஆர்.நந்தகுமார் கூறியதாவது:-

சமச்சீர் கல்வியை நிறுத்தி தரமான கல்வியை வழங்க முனைப்போடு செயல்படும் முதல் - அமைச்சர் ஜெயலலிதாவிற்கு நன்றி - பாராட்டுதலை தெரிவிப்பதற்காக இந்த மாநாடு நடத்தப்படுகிறது.

கல்வி கட்டணத்தை முறைப்படுத்த முத்தரப்பு குழு அமைத்து பெற்றோர்கள், மாணவர்கள், பள்ளி நிர்வாகிகள் பிரச்சினையை தீர்த்து வைக்க வேண்டும்.

ரவிராஜ பாண்டியன் கமிட்டியின் புதிய கல்வி கட்ட குறைபாடுகளை நீக்க வேண்டும். ரத்து செய்யப்பட்ட பள்ளிகள் அங்கீகாரத்தை உடனே வழங்க வேண்டும்.

10 ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கப்பட்ட பள்ளிகளுக்கு நிரந்தர அங்கீகாரம் வழங்க வேண்டும். நிலம் குறைவாக உள்ள பள்ளிகளுக்கு அங்கீகாரம் ரத்து செய்யப்பட்டுள்ளதை மறு பரிசீலனை செய்ய வேண்டும்.

தனியார் பள்ளிகளின் வாழ்வாதார பிரச்சினைகள் பற்றி மாநாட்டில் பேசி முடிவு எடுக்க வேண்டியிருப்பதால் அனைத்து நிர்வாகிகளும் கலந்து கொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

No comments: