Friday, June 17, 2011

சென்னை விமான நிலையத்தில் ரூ.22 லட்சம் மின்சாரம் திருட்டு.

சென்னை விமான நிலையத்தில் ரூ.22 லட்சம் மின்சாரம் திருட்டு: மின்வாரியம் நோட்டீசு

சென்னை விமான நிலையத்திற்கு மின்வாரியத்தில் இருந்து எச்.டி./232 என்ற எண்ணில் இருந்து விமான நிலையத்தின் செயல்பாடுகளுக்கு தேவையான பயன்பாடுகளுக்கு மட்டும் பயன்படுத்த மின்சாரம் வினியோகம் செய்யப்பட்டது.

விமான நிலையத்தின் செயல்பாடுகளுக்கு மட்டுமல்லாமல் வேறு வகைகளுக்கு மின்சாரத்தை பயன்படுத்தியது திடீர் சோதனையில் தெரிய வந்தது.

இதன் மூலம் மின்சார வாரியத்திற்கு ரூ.22 லட்சத்து 4 ஆயிரத்து 591 நஷ்டம் ஏற்பட்டுள்ளது. எனவே இந்த பணத்தை உடனடியாக செலுத்துமாறு இந்திய விமானநிலைய ஆணையத்திற்கு மின்வாரியம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. இந்த நோட்டீஸ் வழங்கப்பட்டவுடன் விமான நிலைய உயர் அதிகாரிகள் மின்வாரிய அதிகாரிகளை சந்தித்து அரசு அலுவலகம் என்பதால் இதில் இருந்து விலக்கு அளிக்கப்பட வேண்டும் என்று கோரினர்.

இந்த கோரிக்கையை மின்வாரியம் நிராகரித்து தள்ளுபடி செய்தது. இது குறித்து மின்வாரிய அதிகாரி ஒருவர் கூறியதாவது:-

சென்னை விமான நிலையத்தில் விமான நிலைய செயல்பாடுகளுக்காக கொடுக்கப்பட்டிருந்த மின் இணைப்பில் இருந்து அங்கு நடைபெறும் கட்டிட பணிக்கு மின்சாரம் எடுக்கப்பட்டுள்ளது. இது விதிகளின்படி மின் திருட்டாகும். அபராதம் செலுத்த வேண்டும் என்று சென்னை விமான நிலையத்தில் உள்ள இந்திய விமான நிலைய ஆணையத்திற்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. ஆனால் இதுவரை அபராத தொகை கட்டப்படவில்லை. இது குறித்து மின்வாரியம் விரைவில் நடவடிக்கை எடுக்கும்.

இவ்வாறு அவர் கூறினார்.

No comments: