Thursday, June 2, 2011

டாடா நிறுவனம் முறைகேடான வகையில் ஸ்பெக்ட்ரம் உரிமம் பெறவில்லை : சிபிஐ.


டாடா டெலிகாம் நிறுவனத்திற்கு முறைகேடான வகையில் ஸ்பெக்ட்ரம் உரிமம் வழங்கப்படவில்லை என்று சிபிஐ தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக 2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கை சிபிஐ விசாரித்து வருகிறது. ராசா, கனிமொழி உள்ளிட்ட தொலை தொடர்ப்பு அதிகாரிகள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். விசாரணை தொடர்ந்து வருகிறது.

இந்த நிலையில் தர்மேந்திர பாண்டே என்ற வழக்கறிஞர் 2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழலில் ரத்தன் டாடா, அவரது நிறுவனத்திற்கு பிஆர் நீரா ராடியா ஆகியோரையும் சேர்க்க வேண்டும் என்று வழக்கறிஞர் தர்மேந்திர பாண்டே கோரியிருந்தார். மேலும் இதுதொடர்பாக நீரா ராடியா 2008-2009 ஆம் ஆண்டு தி மு க எம் பி கனிமொழி உடன் தொலைபேசியில் பேசியது பதிவு செய்யப்பட்டுள்ளது .இதற்க்கு ஆதாரமும் உள்ளது என தெரிவித்திருந்தார்

இதுதொடர்பாக சிபிஐ கூறுகையில்,

டாடா நிறுவனம் டிராய் விதிமுறைகளை பின்பற்றியுள்ளது. உரிமங்கள் வழங்குவதில் விதிமுறைகள் மீறப்படவில்லை 2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழலில் டாடா டெலிகாமுக்கு தொடர்பில்லை டாடா டெலிகாம் நிறுவனத்திற்கு இந்த ஊழலில் பங்கில்லை ரத்தன் டாடா உள்ளிட்டோரின் தொடர்புகள் குறித்து விரிவாக ஆராயப்பட்டது. அதில், டாடா டெலிகாம் நிறுவனத்திற்கு உரிமம் வழங்கியதில் எந்த முறைகேடும் நடந்ததாக தெரியவில்லை. எனவே இந்த ஊழலில் டாடா டெலிகாமுக்குத் தொடர்பு இல்லை என்று சிபிஐ தெரிவித்துள்ளது.

No comments: