Thursday, June 2, 2011

சன் டிவி நிறுவன ஷேர்களில் பெரும் சரிவு !


2ஜி ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் தயாநிதி மாறன் பெயர் அடிபட ஆரம்பித்து இருப்பதால் சன் டிவி நிறுவனத்தின் பங்குகள் பெரும் சரிவை சந்தித்துள்ளன. இன்று ஒரே நாளில் 31 சதவீத சரிவை அவை சந்தித்துள்ளன.

ஸ்பெக்ட்ரம் ஊழல் விவகாரத்தில் தற்போது மத்திய ஜவுளித்துறை அமைச்சர் தயாநிதி மாறனின் பெயரும் அடிபட ஆரம்பித்துள்ளது. ஏர்செல் நிறுவனத்தின் பெருமளவிலான பங்குகளை வைத்துள்ள மலேசியாவின் மாக்ஸிஸ் நிறுவனத்திதற்கு சலுகை காட்டியதாக தயாநிதி மாறன் மீது குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இந்த மாக்ஸிஸ் நிறுவனம் கலாநிதி மாறன் நிறுவனத்தில் முதலீடு செய்துள்ளதால், மாக்ஸிஸுக்கு தயாநிதி மாறன் சலுகை காட்டியதாக கூறப்படுகிறது.

இதுகுறித்து சிபிஐ பூர்வாங்க விசாரணையைத் தொடங்கி விட்டது. விரைவில் தயாநிதி மாறனையும் சிபிஐ விசாரிக்கவுள்ளது. இந்த நிலையில் சன் டிவி நிறுவன பங்குகள் பெரும் சரிவைச் சந்தித்துள்ளன. இன்று ஒரே நாளில் 31 சதவீத சரிவை சன் நிறுவன பங்குகள் சந்தித்துள்ளன.

சன் டிவி தவிர, கலாநிதி மாறனின் விமான நிறுவனமான ஸ்பைஸ் ஜெட் நிறுவனத்தின் பங்குகளும் சரிவைச் சந்தித்துள்ளன.

சன் நிறுவன பங்குகள் 31.1 சதவீதமும், ஸ்பைஸ்ஜெட் 13.5 சதவீத சரிவையும் சந்தித்துள்ளன.

சிபிஐ விசாரணை வரப் போகிறது என்ற செய்திகள் அதிகரித்து வருவதால் முதலீட்டாளர்கள் பெரும் கவலையில் மூழ்கியுள்ளனர். இதனால் அவர்கள் பங்குகளை விற்க குவிந்ததால் பங்கு விலையில் சரிவு ஏற்பட்டுள்ளதாக பங்கு வர்த்தக நிபுணர் சுரேஷ் பர்மார் கூறியுள்ளார்.

1 comment:

Anonymous said...

தயாநிதி மாறன் அடித்த கேபிள் டிவி கொள்ளைகளுக்கு ஆப்பு! தமிழன் பணத்தை எத்தனை வருசம் உறிஞ்சி எடுத்தார் ? தேவைதான்