Sunday, June 5, 2011

பணம் கேட்டால் போன் செய்யுங்கள்... பதறும் அதிமுக எம்.எல்.ஏ.


பெரும்பாலான உழவர் சந்தைகளில் உள்ள கடைகளில் பாதிகடைகள் விவசாயிகளுக்கும், மீதி கடைகள் உள்ளூர் வியாபாரிகளுக்கும் கொடுத்து விடுவார்கள்.

உள்ளூர் ஆளும் கட்சியின் சட்டமன்ற உறுப்பினர் அல்லது அவரது ஆதரவாளர்கள் சொல்லும் வியாபாரிகளுக்குத்தான் கடை ஒதுக்குவார்கள். இப்படி கடை வாங்கும் வியாபாரிகள் தினமும் தங்களுக்கு சிபாரிசு செய்த கட்சிக்காரர்களுக்கு குறிப்பிட்ட தொகையை மாமூலாக கொடுத்துவிடுவார்கள்.

சேலம், சூரமங்கலத்தில் உள்ள உழவர் சந்தையில் சட்டமன்ற உறுப்பினர் பெயரை சொல்லி உள்ளூர் ரா...ரா...கள் கடைக்கு முப்பது ரூபாய் வீதம் வசூல் வேட்டை நடத்தி உள்ளார்கள்.

தகவல் சேலம் மேற்கு தொகுதி எம்எல்ஏ வெங்கடாசலம் காதுக்கு போனதும் அலறியடித்துக்கொண்டு 04.06.2011 அன்று காலையில் சூரமங்கலம் உழவர் சந்தைக்கு வந்துவிட்டார். கடை வைத்துள்ள விவசாயிகளிடம் போய் என் பெயரை சொல்லியோ, அல்லது கட்சி பெயரை சொல்லியோ யாரவது பணம் கேட்டால் கொடுக்க வேண்டாம். யாராவது மிரட்டினால் எனக்கு உடனடியாக போன் செய்யுங்கள் என்று சொல்லி வியாபாரிகள் அனைவருக்கும் தனது விசிட்டிங் கார்டை கொடுத்துவிட்டுப் போயுள்ளார்.

No comments: