Wednesday, June 1, 2011

கனிமொழி ஜாமீன் மனுமீது 3-ந் தேதி தீர்ப்பு.


2 ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு முறைகேடுக்கு துணை போனதாக கனிமொழி எம்.பி, கலைஞர் டி.வி. நிர்வாக இயக்குனர் சரத்குமார் இருவர் மீதும் சி.பி.ஐ. குற்றம் சாட்டியது. இதையடுத்து கனிமொழி, சரத்குமார் இருவரும் கடந்த மாதம் 20-ந் தேதி டெல்லியில் உள்ள சி.பி.ஐ. சிறப்பு கோர்ட்டில் ஆஜரானார்கள்.

சி.பி.ஐ. கோர்ட்டு அவர்களது ஜாமீன் மனுக்களை தள்ளுபடி செய்ததால் இருவரும் அன்றே உடனடியாக கைது செய்யப்பட்டு திகார் ஜெயிலில் அடைக்கப்பட்டனர். அவர்கள் இருவரும் தங்களை ஜாமீனில் விடக்கோரி கடந்த 23-ந் தேதி டெல்லி ஐகோர்ட்டில் மனுதாக்கல் செய்தனர்.

அந்த மனுக்கள் மீதான விசாரணையின் போது கனிமொழி தரப்பிலும், சி.பி.ஐ. தரப்பிலும் வக்கீல்கள் ஆஜராகி வாதாடினார்கள். இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி பரிகோகே தீர்ப்பை தள்ளி வைத்தார்.டெல்லி ஐகோர்ட்டுக்கு வரும் 4-ந் தேதி கோடை விடுமுறை தொடங்குகிறது. எனவே நாளை மறுநாள் (3-ந்தேதி) கனிமொழி எம்.பி. ஜாமீன்மனு மீதான தீர்ப்பு வழங்கப்படும் என்று தகவல் வெளியாகி உள்ளது.

கனிமொழிக்கு ஜாமீன் கிடைத்துவிடும் என்று தி.மு.க.வினர் நம்பிக்கையுடன் உள்ளனர். ஆனால் சட்ட நிபுணர்கள் கூறுகையில், கனிமொழியை ஜாமீனில் விட்டால் ஸ்பெக்ட்ரம் வழக்கு விசாரணை பாதிக்கப்படுமா என்பதை பொறுத்தே அவருக்கு விடுதலை கிடைக்கும் என்றனர்.

ஸ்வான் டெலிகாம் நிறுவன நிர்வாக இயக்குனர் வினோத் கோயங்கா, யுனிடெக் நிறுவன நிர்வாக இயக்குனர் சஞ்சய் சந்திரா, அனில் அம்பானி குழுமத்தின் அதிகாரிகள் கவுதம் ஜோஷி, அரிநாயர், சுரேந்திரபிபாரா ஆகியோரது ஜாமீன் மனுக்களை டெல்லி ஐகோர்ட்டு தள்ளுபடி செய்து விட்டது குறிப்பிடத்தக்கது.

No comments: