Friday, June 10, 2011

சிபிஐ 2ஜி வழக்கை அரசியல் ஆயுதமாக்குகிறதா ?


திமுக காங்கிரஸ் உறவில் எந்த சிக்கலும் இல்லை என்று திமுக தலைவர் கலைஞர் தெரிவித்துள்ளார். ஸ்பெக்ட்ரம் விவகாரத்தை சிலர் வேண்டுமென்றே பூதாகரமாக்கி வருதாகவும் குற்றம் சாட்டினார்.

திமுக தலைவர் கலைஞர் தலைமையில் சென்னை அண்ணா அறிவாலயத்தில் உள்ள முரசொலி மாறன் வளாகத்தில் திமுக உயர்நிலை செயல்திட்டக் குழு கூட்டம் நடைபெற்றது.

இக்கூட்டத்திற்குப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், சமச்சீர் கல்வி திட்டத்தை தொடரும் படி சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்திருப்பதை சுட்டிக்காட்டினார். சமச்சீர் கல்வியை தடுக்க அதிமுக அரசு தொடர்ந்து முயற்சி மேற்கொண்டால், திமுக சார்பில் எத்தகைய போராட்டங்களை மேற்கொள்வது என்று பொதுக்குழு கூட்டத்தில் முடிவு செய்யப்படும் என்றார்.

திமுக காங்கிரஸ் உறவு குறித்து செய்தியாளர்கள் கேட்டபோது, இரு கட்சிகளிடையேயான உறவில் எந்த சிக்கலும் இல்லை என்று கூறினார்.

2ஜி வழக்கை சிபிஐ அரசியல் ஆயுதமாக பயன்படுத்துகிறதா என்ற மற்றொரு கேள்விக்கு பதில் அளித்த கலைஞர், ஆயுதமாக இருக்கிறது. ஆனால் அரசியல் ஆயுதமா என தெரியாது என்று குறிப்பிட்டார். ஸ்பெக்ட்ரம் விவகாரத்தை சிலர் வேண்டுமென்றே பூதாகரமாக்கி வருதாகவும் குற்றம் சாட்டினார்.

நீதிமன்ற விவகாரங்களில் அரசு தலையிட வேண்டும் என்று திமுக என்றைக்கும் நினைத்தது இல்லை என்றும் கூறியுள்ளார்.

No comments: