Friday, June 10, 2011

350 கி.மீ.தூரம் செல்லும் பிரிதிவி-2 ஏவுகணை சோதனை வெற்றி.

350 கி.மீ.தூரம் செல்லும்  பிரிதிவி-2 ஏவுகணை சோதனை வெற்றி

இந்தியாவின் பாதுகாப்புக்காக பிருதிவி வகை ஏவுகணைகள் தயாரிக்கப்பட்டு ராணுவத்தில் சேர்க்கப்பட்டுள்ளன. இந்த ஏவுகணைகளை பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு கழகம் அடிக்கடி குறிப்பிட்ட இலக்குகளை நோக்கி செலுத்தி சோதனை செய்து வருகிறது.

அந்த வகையில் இன்று காலை பிரிதிவி-2 ரக ஏவுகணை சோதித்து பார்க்கப்பட்டது. ஒரிசா மாநிலம் சந்திப்பூரில் இருந்து காலை 9.05 மணிக்கு "மொபைல் லாஞ்சர்" மூலம் பிரதிவி-2 ஏவுகணை ஏவப்பட்டது. குறிப்பிட்ட நேரத்தில் குறிப்பிட்ட இலக்கை அந்த ஏவுகணை மிகத் துல்லியமாக தாக்கியது.

இதையடுத்து பிரதிவி ஏவுகணை முழு வெற்றி பெற்றுள்ளதாக ராணுவ அதிகாரிகள் அறிவித்தனர். கடந்த 3 ஆண்டுகளாக நடத்தப்பட்டுள்ள பிரிதிவி-2 ரக ஏவுகணை சோதனைகள் அனைத்தும் 100 சதவீத வெற்றியை பெற்றது குறிப்பிடத்தக்கது.

பிரிதிவி-2 ரக ஏவுகணை 350 கிலோ மீட்டர் தூரம் வரை சென்று குறிப்பிட்ட இலக்கை தாக்கும் சக்தி கொண்டது. இந்த ஏவுகணையில் 500 முதல் 1000 கிலோ எடை உள்ள அணு குண்டுகள் வைத்து பயன்படுத்தப்படும். 9 மீட்டர் நீளமும், ஒரு மீட்டர் சுற்றளவும் கொண்ட பிரிதிவி ஏவுகணைகள் இதுவரை 4 தடவை வெற்றிகரமாக சோதித்து பார்க்கப் பட்டுள்ளது.

No comments: