
தமிழக முதலமைச்சர் கச்சதீவை மீட்கும் தீர்மானம் கொண்டுவர, எதிர்க்கட்சித் தலைவர் அதற்கு ஆதரவு கொடுத்திருக்கிறார்.
“முதல்வர் ஜெயலலிதா கொண்டுவந்துள்ள இந்த தீர்மானத்துக்கு முழு மனதோடு ஆதரவு தெரிவிக்கிறேன்” என்று எதிர்க்கட்சித் தலைவர் விஜயகாந்த் சட்டசபையில் பேசும்போது தெரிவித்திருக்கிறார்.
“நான் மதுரையில் பிறந்தவன். மதுரையிலேயே வளர்ந்தவன். இந்த வகையில், ஒரு காலத்தில் கச்சதீவுக்கு நானும் போயிருக்கிறேன். நான் அங்கே சென்றபோது, அந்தப் பகுதியில் பண்டமாற்று முறையில் பொருட்கள் கொடுத்து வாங்கப்பட்டதை கண்டிருக்கிறேன்.
இன்று அந்த தீவிற்கு தமிழர்கள் யாரும் போக முடியாத, வர முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
இதுதான் மக்களுக்கு, முக்கியமாக தமிழக மீனவர்களுக்கு உள்ள குறை. மக்களுடைய குறைகளை அறிந்து, அதை தீர்க்கின்ற வகையில் நடப்பது தான் ஜனநாயகம். கடந்த தி.மு.க. அரசு, மீனவர்களின் குறைகள் எதையும் கேட்கவில்லை.
1973 ல் ஜெயபிரகாஷ் நாராயணன் ஊழல் தடுப்பு இயக்கம் நடத்தியபோது, தி.மு.க., அதற்கு ஆதரவு அளித்தது என கருணாநிதி பேசியிருக்கிறார். அதன் பின்னணி என்ன?
1972ம் ஆண்டில் தி.மு.க.,வை விட்டு எம்.ஜி.ஆர்., வெளியேறி அ.தி.மு.க.வை, தொடங்கினார். அன்றைய முதல்வர் கருணாநிதி மீது வருமானத்திற்கு அதிகமாக சொத்துகளைச் சேர்த்திருக்கிறார் என்பதே எம்.ஜி.ஆரின் பிரதான குற்றச்சாட்டு.
இந்தக் குற்றச்சாட்டு கருணாநிதியை மிரள வைத்தது. எங்கே தன்மீது மத்திய அரசு வழக்கு தொடுத்து விடுமோ என்று அவர் பயந்தார்.
அதிலிருந்து தப்புவதற்காகத்தான், ஸ்ரீலங்காவுக்கு கச்சத்தீவை தாரை வார்த்தார் கருணாநிதி!” என்று விளக்கம் கொடுத்திருக்கிறார், எதிர்க்கட்சித் தலைவர் விஜயகாந்த்.
ஸ்ரீலங்காவுக்கு கச்சதீவு கொடுக்கப்பட்ட உடன்பாடு தொடர்பாக, மற்றொரு பழைய உதாரணத்தையும் சுட்டிக் காட்டியிருக்கிறார் எதிர்க்கட்சித் தலைவர்.
“மேற்கு வங்கத்தில் ஒரு பகுதியை பாகிஸ்தானுக்கு கொடுக்க வேண்டும் என்ற ஒரு நிலை ஏற்பட்டிருந்தது. அப்போது மேற்கு வங்காளத்தின் முதல்வராக இருந்த பி.சி.ராய் அதற்கு மறுப்பு தெரிவித்தார். சுப்ரீம் கோர்ட்டில் வழக்கும் தொடுத்தார்.
அந்த வழக்கில் அவரது வாதம் என்னவென்றால், இந்திய நாட்டின் ஒரு பகுதியை, இன்னொரு நாட்டிற்கு வழங்க வேண்டுமென்றால், இந்திய நாடாளுமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றினால் மாத்திரம் போதாது. நாடாளுமன்றத் தீர்மானத்துடன், நீதிமன்றமும் அனுமதி வழங்கவேண்டும்.
இந்த இரு அனுமதியும் இருந்தால்தான், நாட்டின் ஒரு பகுதியை மற்றொரு நாட்டுக்கு வழங்க முடியும்.
ஆனால், ஸ்ரீலங்காவுக்கு, கச்சதீவு அவ்வாறு வழங்கப்படவில்லை.நாடாளுமன்றத் தீர்மானம் மாத்திரமே உள்ளது. கச்சதீவை ஸ்ரீலங்காவுக்கு வழங்க, நீதிமன்ற அனுமதி கிடையாது.
அப்போது தமிழக முதல்வராக இருந்த கருணாநிதி, இந்த விஷயத்தில்எவ்வளவோ செய்திருக்கலாம். ஆனால், செய்யவில்லை. வெறும் கண் துடைப்பு நாடகத்தை மட்டுமே நடத்தியுள்ளார்.
இப்போது கச்சதீவை மீட்கும் முயற்சியில் முதல்வர் இறங்கியுள்ளார். அவரது இந்த முயற்சிக்கு முழு மனதோடு ஆதரவு தெரிவிக்கிறேன்” என்று பேசியிருக்கிறார், எதிர்க்கட்சித் தலைவர் விஜயகாந்த்.
“முதல்வர் ஜெயலலிதா கொண்டுவந்துள்ள இந்த தீர்மானத்துக்கு முழு மனதோடு ஆதரவு தெரிவிக்கிறேன்” என்று எதிர்க்கட்சித் தலைவர் விஜயகாந்த் சட்டசபையில் பேசும்போது தெரிவித்திருக்கிறார்.
“நான் மதுரையில் பிறந்தவன். மதுரையிலேயே வளர்ந்தவன். இந்த வகையில், ஒரு காலத்தில் கச்சதீவுக்கு நானும் போயிருக்கிறேன். நான் அங்கே சென்றபோது, அந்தப் பகுதியில் பண்டமாற்று முறையில் பொருட்கள் கொடுத்து வாங்கப்பட்டதை கண்டிருக்கிறேன்.
இன்று அந்த தீவிற்கு தமிழர்கள் யாரும் போக முடியாத, வர முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
இதுதான் மக்களுக்கு, முக்கியமாக தமிழக மீனவர்களுக்கு உள்ள குறை. மக்களுடைய குறைகளை அறிந்து, அதை தீர்க்கின்ற வகையில் நடப்பது தான் ஜனநாயகம். கடந்த தி.மு.க. அரசு, மீனவர்களின் குறைகள் எதையும் கேட்கவில்லை.
1973 ல் ஜெயபிரகாஷ் நாராயணன் ஊழல் தடுப்பு இயக்கம் நடத்தியபோது, தி.மு.க., அதற்கு ஆதரவு அளித்தது என கருணாநிதி பேசியிருக்கிறார். அதன் பின்னணி என்ன?
1972ம் ஆண்டில் தி.மு.க.,வை விட்டு எம்.ஜி.ஆர்., வெளியேறி அ.தி.மு.க.வை, தொடங்கினார். அன்றைய முதல்வர் கருணாநிதி மீது வருமானத்திற்கு அதிகமாக சொத்துகளைச் சேர்த்திருக்கிறார் என்பதே எம்.ஜி.ஆரின் பிரதான குற்றச்சாட்டு.
இந்தக் குற்றச்சாட்டு கருணாநிதியை மிரள வைத்தது. எங்கே தன்மீது மத்திய அரசு வழக்கு தொடுத்து விடுமோ என்று அவர் பயந்தார்.
அதிலிருந்து தப்புவதற்காகத்தான், ஸ்ரீலங்காவுக்கு கச்சத்தீவை தாரை வார்த்தார் கருணாநிதி!” என்று விளக்கம் கொடுத்திருக்கிறார், எதிர்க்கட்சித் தலைவர் விஜயகாந்த்.
ஸ்ரீலங்காவுக்கு கச்சதீவு கொடுக்கப்பட்ட உடன்பாடு தொடர்பாக, மற்றொரு பழைய உதாரணத்தையும் சுட்டிக் காட்டியிருக்கிறார் எதிர்க்கட்சித் தலைவர்.
“மேற்கு வங்கத்தில் ஒரு பகுதியை பாகிஸ்தானுக்கு கொடுக்க வேண்டும் என்ற ஒரு நிலை ஏற்பட்டிருந்தது. அப்போது மேற்கு வங்காளத்தின் முதல்வராக இருந்த பி.சி.ராய் அதற்கு மறுப்பு தெரிவித்தார். சுப்ரீம் கோர்ட்டில் வழக்கும் தொடுத்தார்.
அந்த வழக்கில் அவரது வாதம் என்னவென்றால், இந்திய நாட்டின் ஒரு பகுதியை, இன்னொரு நாட்டிற்கு வழங்க வேண்டுமென்றால், இந்திய நாடாளுமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றினால் மாத்திரம் போதாது. நாடாளுமன்றத் தீர்மானத்துடன், நீதிமன்றமும் அனுமதி வழங்கவேண்டும்.
இந்த இரு அனுமதியும் இருந்தால்தான், நாட்டின் ஒரு பகுதியை மற்றொரு நாட்டுக்கு வழங்க முடியும்.
ஆனால், ஸ்ரீலங்காவுக்கு, கச்சதீவு அவ்வாறு வழங்கப்படவில்லை.நாடாளுமன்றத் தீர்மானம் மாத்திரமே உள்ளது. கச்சதீவை ஸ்ரீலங்காவுக்கு வழங்க, நீதிமன்ற அனுமதி கிடையாது.
அப்போது தமிழக முதல்வராக இருந்த கருணாநிதி, இந்த விஷயத்தில்எவ்வளவோ செய்திருக்கலாம். ஆனால், செய்யவில்லை. வெறும் கண் துடைப்பு நாடகத்தை மட்டுமே நடத்தியுள்ளார்.
இப்போது கச்சதீவை மீட்கும் முயற்சியில் முதல்வர் இறங்கியுள்ளார். அவரது இந்த முயற்சிக்கு முழு மனதோடு ஆதரவு தெரிவிக்கிறேன்” என்று பேசியிருக்கிறார், எதிர்க்கட்சித் தலைவர் விஜயகாந்த்.
No comments:
Post a Comment