Wednesday, June 22, 2011

அமெரிக்காவில் ரூ.2075 கோடி ஊழல் செய்த அமெரிக்க வாழ் இந்திய தம்பதி.

அமெரிக்காவில் ரூ.2075 கோடி ஊழல் செய்த அமெரிக்க வாழ் இந்திய தம்பதி

இந்தியாவை சேர்ந்தவர் ரெட்டி ஆலென். இவரது மனைவி டாக்டர் பத்மா ஆலென். இவர்கள் அமெரிக்காவில் புளும்பெர்க் நகரில் தங்கியுள்ளனர்.

புளும்பெர்க் மாநகராட்சியில் சிட்டி டைம் என்ற மிகப்பெரிய திட்டத்தை மேயர் மைக்கேல் தொடங்கியுள்ளார். இந்த திட்டப் பணிகளில் ரெட்டி ஆலெனும், அவரது மனைவி பத்மா ஆலெனும் ஊழல் செய்ததாக புகார் கூறப்பட்டுள்ளது.

இது குறித்து மேன்காட்டன் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. அதில் கணவன், மனைவி இருவரும் உயர் அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுத்தும், போலியான ஆவணங்களை தயார் செய்தும் ரூ.2075 கோடி ஊழல் செய்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

இது சமீபத்தில் அமெரிக்காவில் நடந்த மிகப்பெரிய ஊழல் என கூறப்படுகிறது. எனவே, அங்கு இதுகுறித்து பரபரப்பாக பேசப்படுகிறது.


No comments: