Sunday, May 29, 2011

விலைவாசிஉயர்வை கண்டித்து போராட்டம்: தா.பாண்டியன்.


விலைவாசி உயர்விற்கு தேர்தல் வரை மாநில அரசை பொறுப்பாக்கிய கம்யூனிஸ்டுகள் அதுவும் குறிப்பாக தா.பாண்டியன் தற்போது மத்திய அரசை பொறுப்பாக்குகிறார்.

விலைவாசி உயர்விற்கு உண்மையான காரணகர்த்தா மத்திய அரசுதான் என்று தெரிந்திருந்தும் ஓட்டுக்காக அல்லது கூட்டணிக்காக உண்மையை மறைத்துப் பொய் பேசியிருக்கிறார்.

தா.பாண்டியனை பொறுத்தவரையில், கீழே விழுந்தேன் மீசையில் மண் படவில்லை என்பதைக் கூட, சதிகாரர்களால் கீழே தள்ளப்பட்டபோதும் கூட கீழே விழாமலும் மீசையில் மண்படாமலும் நிமிர்ந்து நின்றவர்கள் நாங்கள் என்று சுவைபட பேசுபவர்.

திருவாரூரில் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,

மத்திய அரசு தொடர்ந்து மக்கள் விரோதப்போக்கை கடைபிடித்து வருகிறது. பணவீக்கம், விலைவாசி உயர்வால் மக்கள் மிகுந்த பாதிப்பு அடைந்து வருகிறார்கள். இதனை கண்டித்து வருகிற ஜுன் மாதம் முதல் இந்திய கம்யூனிஸ்டு கட்சி சார்பில் தொடர் போராட்டம் நடத்த உள்ளோம். திறமையற்ற ஆட்சியாளர்களால் விலைவாசி நாளுக்குநாள் உயர்ந்து கொண்டே செல்கிறது.

பணவீக்கம் நாளுக்குநாள் அதிகரிக்கிறது என்று மத்தியமந்திரி கூறுவது, அரசை பயமுறுத்துகிறாரா? அல்லது மக்களை பயமுறுத்துகிறாரா? என்று தெரியவில்லை என்றார்

No comments: