Sunday, April 10, 2011

டெல்லியில் “சூப்பர்பக்ஸ்” பாக்டீரியா பரவும் அபாயம்; விஞ்ஞானிகள் எச்சரிக்கை.



புதுடெல்லி, உடலில் நோய்களை ஏற்படுத்தும் பாக்டீரியா வகைகளில் சூப்பர்பக்ஸ் என்ற பாக்டீரியா மிகவும் அபாயகரமானது. இந்த பாக்டீரியா உடலில் உள்ள ஜீன்களை அழிக்கும் ஆற்றல் கொண்டது. சூப்பர்பக்ஸ் பாக்டீரியா முதன் முதலாக இந்தியாவில் இருந்து பரவியதாக முன்பு கூறப்பட்டது.

இந்த பாக்டீரியா குடிதண்ணீரில் மூலம்தான் பரவும். சூப்பர்பக்ஸ் கலந்த குடி தண்ணீரை குடிப்பவர்களுக்கு காலரா போன்ற நோய்கள் ஏற்படும். சூப்பர் பக்சுக்கு முழுமையான தடுப்பு மருந்து இல்லாததால், இந்த பாக்டீரியாவால் பாதிக்கப்பட்டால் மரணம் ஏற்படலாம்.

பயங்கர விளைவை ஏற்படுத்தும் சூப்பர்பக்ஸ் பாக்டீரியா தற்போது டெல்லியில் பரவி உள்ளதாக விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர். எனவே குடி நீர் விஷயத்தில் மிகவும் உஷாராக இருக்கும்படி விஞ்ஞானிகள் கேட்டுக் கொண்டுள்ளனர்.

சூப்பர்பக்ஸ் பாக்டீரியாவால் சுமார் 14 லட்சம் பேரின் வாழ்வாதாரம் பாதிக்கப்படலாம் என்று விஞ்ஞானிகள் கணித்துள்ளனர்

No comments: