
கடலூர் மாவட்டம் புவனகிரி சட்டமன்ற தொகுதி பா.ம.க. வேட்பாளர் அறிவுச்செல்வனை ஆதரித்து சேத்தியாத்தோப்பு பஸ் நிலையம் அருகில் நடிகை குஷ்பு தேர்தல் பிரசாரம் செய்தார். அப்போது அவர் கூறியதாவது:-
டாக்டர் கலைஞர், சோனியாகாந்தி, டாக்டர் ராமதாஸ், திருமாவளவன் ஆகியோர் வெற்றிக்கூட்டணியில் மாம்பழம் சின்னத்தில் அறிவுச்செல்வன் போட்டியிடுகிறார். வருகிற 13-ந் தேதி அவரை ஜெயிக்கவைக்கவேண்டும். 6-வது முறையாக வெற்றிக் கூட்டணியில் கலைஞர் போட்டியிடுகிறார். அவரை முதல்-அமைச்சர் ஆக்க வேண்டும்.
கடந்த வாரம் நடந்த உலககோப்பை கிரிக்கெட் போட்டியில் டோனி தலைமையில் யுவராஜ்சிங், காம்பீர் ஆகியோர் எப்படி பக்கபலமாக இருந்து அணியை வெற்றி பெற செய்தார்களோ, அதேபோல் தேர்தலில் டாக்டர் ராமதாஸ், திருமாவளவன் ஆகியோர் பக்கபலமாக இருக்கிறார்கள். இந்த அணி நிச்சயம் 234 தொகுதிகளிலும் வெற்றி பெறும்.
கலைஞர் மீண்டும் 6-வது முறையாக முதல்-அமைச்சர் ஆவார். அதற்கு இந்த தொகுதியில் மாம்பழம் சின்னத்தில் போட்டியிடும் அறிவுச் செல்வனை வெற்றி பெற செய்ய வேண்டும்.
இவ்வாறு நடிகை குஷ்பு பேசினார்.
டாக்டர் கலைஞர், சோனியாகாந்தி, டாக்டர் ராமதாஸ், திருமாவளவன் ஆகியோர் வெற்றிக்கூட்டணியில் மாம்பழம் சின்னத்தில் அறிவுச்செல்வன் போட்டியிடுகிறார். வருகிற 13-ந் தேதி அவரை ஜெயிக்கவைக்கவேண்டும். 6-வது முறையாக வெற்றிக் கூட்டணியில் கலைஞர் போட்டியிடுகிறார். அவரை முதல்-அமைச்சர் ஆக்க வேண்டும்.
கடந்த வாரம் நடந்த உலககோப்பை கிரிக்கெட் போட்டியில் டோனி தலைமையில் யுவராஜ்சிங், காம்பீர் ஆகியோர் எப்படி பக்கபலமாக இருந்து அணியை வெற்றி பெற செய்தார்களோ, அதேபோல் தேர்தலில் டாக்டர் ராமதாஸ், திருமாவளவன் ஆகியோர் பக்கபலமாக இருக்கிறார்கள். இந்த அணி நிச்சயம் 234 தொகுதிகளிலும் வெற்றி பெறும்.
கலைஞர் மீண்டும் 6-வது முறையாக முதல்-அமைச்சர் ஆவார். அதற்கு இந்த தொகுதியில் மாம்பழம் சின்னத்தில் போட்டியிடும் அறிவுச் செல்வனை வெற்றி பெற செய்ய வேண்டும்.
இவ்வாறு நடிகை குஷ்பு பேசினார்.
No comments:
Post a Comment