Thursday, April 21, 2011

ஜப்பானில் தாய்ப்பாலில் கதிர்வீ்ச்சு : மக்கள் அதி்ர்ச்சி.


டோக்கியோ, ஜப்பானில் தாய்ப்பாலில் கதிர்வீச்சு இருப்பது கண்டுபிடிக்கப் பட்டுள்ளது.

பூகம்பம் மற்றும் சுனாமியால் பாதிக்கப்பட்டுள்ள ஜப்பானில் உள்ள ஃபுகுஷிமா அணு உலை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. அதில் இருந்து கதிர்வீச்சு பரவுவதால் அப்பகுதியில் உள்ள மக்கள் வெளியேற்றப் பட்டனர். ஜப்பான் தலைநகர் டோக்கியோவின் கிழக்கு மற்றும் வடகிழக்கு பகுதியில் வசிக்கும் 9 தாய்மார்களின் தாய்ப்பால் பரிசோதிக்கப் பட்டது.

அதில் 4 பேரின் தாய்ப்பாலில் கதிர்வீ்ச்சு கொண்ட அயோடின் அதிக அளவில் கதிர்வீச்சு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

இந்நிலையில் கதிர்வீச்சின் தாக்கம் கடலிலுள்ள மீன்களுக்கும் பரவியிருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இதனால் கடலில் மீன்பிடிக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது. மீன்கள் பருவ நிலைக்கு ஏற்றவாறு இடம் பெயரும். அவ்வாறு ஜப்பானில் கதிர்வீச்சுள்ள மீன்கள் வேறு இடத்திற்கு வருகையில் பிடிக்கப்பட்டால் அதன் மூலம் மனிதனுக்கு பரவும். இதனால் கடல் உணவு பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது.


No comments: