இன்று இரவு ஈரோட்டில் திமுக கூட்டணி தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டம் நடைபெற்றது. திமுக தலைவர் கருணாநிதி இக்கூட்டத்திற்கு தலைமை ஏற்றார்.
திமுக மீதும், முதல்வர் கருணாநிதி மீதும் கடுமையான விமர்சன அம்புகளை எய்து வந்த காங்கிரஸ் மூத்த தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் இந்த கூட்ட மேடையில் ஏறினார். அதுமட்டுமல்லாது முதல்வர் கருணாநிதிக்கு அருகில் அமர்ந்தார். கூட்டணி முடிவாவதற்கு முன்பு திமுக அரசையும், முதல்வர் கருணாநிதியையும் மிகக் கடுமையாக சாடியவர் இளங்கோவன். ஒருகட்டத்தில் விலகிக் கொள்ள நேரிடும் என்று முதல்வர் எச்சரிக்கை விடும் அளவுக்கெல்லாம் இளங்கோவன் பேச்சு இருந்தது.
இந்த நிலையில், இன்று நடந்த கூட்டத்தில் இளங்கோவனும் கலந்து கொண்டார். அத்தோடு நில்லாமல் முதல்வரையும் வெகுவாக புகழ்ந்து பேசினார்.
பின்னர் பேச வந்த முதல்வர், ‘பத்திரிக்கைகளில் எல்லாம் இடம்பெறப்போகும் செய்தி இதுதான்.
அதிசயம்! கருணாநிதியும் ஈ.வி.கே.எஸ். இளங்கோவனும் ஒரே மேடையில்!! என்றுதான் எழுதப்போகிறார்கள்.
இளங்கோவன் இன்று என் பக்கத்தில் உட்கார்ந்திருக்கிறார்.
நான் பெரியார் குருகுலத்தில் பயின்றபோது குழந்தைப்பருவத்தில் இருந்த இளங்கோவன் என் மடியில் தவழ்ந்திருக்கிறார் என்று பேசியபோது, ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் எழுந்து முதல்வர் காலைத்தொட்டு வணங்கினார். இந் நிகழ்வு சற்றே நெகிழ்ச்சியாக இருந்தது
திமுக மீதும், முதல்வர் கருணாநிதி மீதும் கடுமையான விமர்சன அம்புகளை எய்து வந்த காங்கிரஸ் மூத்த தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் இந்த கூட்ட மேடையில் ஏறினார். அதுமட்டுமல்லாது முதல்வர் கருணாநிதிக்கு அருகில் அமர்ந்தார். கூட்டணி முடிவாவதற்கு முன்பு திமுக அரசையும், முதல்வர் கருணாநிதியையும் மிகக் கடுமையாக சாடியவர் இளங்கோவன். ஒருகட்டத்தில் விலகிக் கொள்ள நேரிடும் என்று முதல்வர் எச்சரிக்கை விடும் அளவுக்கெல்லாம் இளங்கோவன் பேச்சு இருந்தது.
இந்த நிலையில், இன்று நடந்த கூட்டத்தில் இளங்கோவனும் கலந்து கொண்டார். அத்தோடு நில்லாமல் முதல்வரையும் வெகுவாக புகழ்ந்து பேசினார்.
பின்னர் பேச வந்த முதல்வர், ‘பத்திரிக்கைகளில் எல்லாம் இடம்பெறப்போகும் செய்தி இதுதான்.
அதிசயம்! கருணாநிதியும் ஈ.வி.கே.எஸ். இளங்கோவனும் ஒரே மேடையில்!! என்றுதான் எழுதப்போகிறார்கள்.
இளங்கோவன் இன்று என் பக்கத்தில் உட்கார்ந்திருக்கிறார்.
நான் பெரியார் குருகுலத்தில் பயின்றபோது குழந்தைப்பருவத்தில் இருந்த இளங்கோவன் என் மடியில் தவழ்ந்திருக்கிறார் என்று பேசியபோது, ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் எழுந்து முதல்வர் காலைத்தொட்டு வணங்கினார். இந் நிகழ்வு சற்றே நெகிழ்ச்சியாக இருந்தது
2 comments:
மாற்றானையும் மண்டியிட வைக்கும் தலைவனின் மந்திரம்.
மயிறு! இந்த நெகிழ்ச்சி அன்பு புண்ணாக்கு வசனம் எல்லாம்
மக்கள் பிரச்சனைக்கு சம்பந்தமே இல்லாதவை
Bloody Rascal Leaders - Thinking men are 0% interested to know your crap personal diplomatic dramatic emotions
Post a Comment