மத்திய ரசாயனம் மற்றும் உரத்துறை மந்திரி மு.க.அழகிரியின் இல்லம், மதுரை சத்யசாய் நகரில் உள்ளது. அவர் மத்திய மந்திரி என்பதால், அவரது வீட்டிற்கு 24 மணி நேர போலீஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டு வந்தது.
இந்நிலையில் இன்று இரவு 7மணியளவில் மத்திய அமைச்சர் அழகிரியின் மதுரை வீட்டில் இருந்த போலீஸ் பாதுகாப்பு எந்தவித முன் தகவலின்றி அதிரடியாக தேர்தல் ஆணையத்தால் வாபஸ் பெறப்பட்டுள்ளது.
இவரைப் போன்ற பிற அமைச்சர்கள், மற்றும் அரசியல் பிரமுகர்களின் பாதுகாப்பு குறைக்கப் படவில்லை என்பது குறிபிடத்தக்கது.
தேர்தல் ஆணையம் ஏதோ உள்நோக்கோடு தனது பாதுகாப்பை நீக்கியுள்ளது, என்று அழகிரி குற்றம் சாட்டியுள்ளார்.
இதனால் தனக்கும் மற்றும், தனது குடும்பத்தாருக்கும் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது என்றும், இந்த நிலையில் எனது உயிருக்கும், உடமைக்கும் ஆபத்து நிகழ்ந்தால் அதற்கு முழுக்க முழுக்க தேர்தல் ஆணையமும், மதுரை மாவட்ட காவல்துறை ஆணையரும், மதுரை மாவட்ட ஆட்சித்தலைவருமே தான் பொறுப்பு என்று மு.க.அழகிரி கூறியுள்ளார்.
மேலும் இந்த புகாரை மத்திய அரசிற்கு தந்தியாக அனுப்பியுள்ளார்.
No comments:
Post a Comment