Thursday, March 31, 2011

அதிமுக கொடிகளை அகற்றச் சொன்ன விஜயகாந்த்.


அரியலூர் பேருந்து நிலையம் அருகே தேமுதிக தலைவர் விஜயகாந்த் பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது அதிமுக தொண்டர்கள் தங்களது கட்சி கொடிகளை உயர்த்திப் பிடித்தி்ருந்தனர். இதைப் பார்த்த விஜயகாந்த், அந்த அ.தி.மு.க கொடிகளை இங்கிருந்து அகற்றுங்க என்றார்.

இதனால் அதிர்ச்சி அடைந்த அதிமுக தொண்டர்கள் விஜய்காந்துக்கு எதிராக கூச்சலிட்டனர். உடனே தனது கட்சியினரிடம் அவுங்களைப் பிடிங்க என்று சத்தம் போட்டார் விஜய்காந்த்.

தொடர்ந்து, எம்புட்டு நேரம் சொல்ரேன்,மடையனா? அந்த கொடியை கீழே போடு... நான் என்னோட கட்சிக்கு பிரச்சாரம் செய்ய வந்திருக்கிறேன். என விஜய்காந்த கத்த, இதையடுத்து அதிமுகவினரின் எதிர்ப்பு கோஷம் மேலும் அதிகமானது. இதையடுத்து பிரச்சாரமே செய்யாமல் திரும்பிச் சென்றார் விஜயகாந்த்.

விஜய்காந்துடன் அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதாவோ அல்லது ஜெயலலிதாவுடன் விஜய்காந்தோ இதுவரை ஒரு இடத்தில் கூட கூட்டாக பிரச்சாரமோ, பொதுக் கூட்டமோ நடத்தவில்லை என்பதும், அப்படிப்பட்ட திட்டமே அதிமுக கூட்டணியிடம் இல்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

No comments: