Thursday, March 31, 2011

இந்தியா-இலங்கை இறுதிப் போட்டியைக் காண வரும் ராஜபக்சே!

மும்பையில் வரும் சனிக்கிழமை நடைபெறும் இந்தியா-இலங்கை இடையிலான உலகக் கோப்பை இறுதிப் போட்டியைக் காண இலங்கை அதிபர் ராஜபக்சே இந்தியா வருகிறார்.

மொகாலியில் இந்தியா-பாகிஸ்தான் அணிகளுக்கு இடையே நடந்த அரையிறுதிப் போட்டியைக் காண பாகிஸ்தான் பிரதமர் கிலானிக்கு இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங் அழைப்பு விடுத்தார். இதையடுத்து கிலானி நேற்று மொகாலி வந்து போட்டியை மன்மோகனுடன் இணைந்து ரசித்தார்.

மேலும் இரு தலைவர்களும் சிறிது நேரம், இரு நாட்டு விவகாரங்கள் குறித்தும் பேசினர். கிலானிக்கு மன்மோகன் சிறப்பு விருந்தும் அளித்தார்.

இந் நிலையில் இந்தியாவுடன் தனது நாட்டு அணி இறுதிப் போட்டியில் விளையாடவுள்ளதையடுத்து இதைக் காண மும்பை வர முடிவு செய்துள்ளார் இலங்கை அதிபர் ராஜபக்சே. இதற்கான அனுமதியையும் தன்னுடன் வரும் 30 பேருக்கு சிறப்பு இருக்கைகளையும் கோரியுள்ளார் ராஜபக்சே.

அதே போல வங்கதேச அதிபர் ஷேக் ஹசீனாவையும் போட்டியைக் காண வருமாறு இந்தியா அழைத்துள்ளது

No comments: