Thursday, March 31, 2011

விஜயகாந்த்தை ஏன் கைது செய்யவில்லை: வடிவேலு.

விஜயகாந்த்தை ஏன் கைது செய்யவில்லை: வடிவேலு

பொதுஇடத்தில் வேட்பாளரை அடித்த விஜயகாந்த்தை ஏன் கைது செய்யவில்லை என, நடிகர் வடிவேலு கேள்வி எழுப்பியுள்ளார்.

எழும்பூர் தொகுதிகளில் திமுக கூட்டணி வேட்பாளர்களுக்கு ஆதரவாக வடிவேலு பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது பேசிய வடிவேலு,

விஜயகாந்த் தனது கட்சியின் சார்பில் போட்டியிடும் 41 வேட்பாளர்களின் பெயர்களை படித்து அறிந்து தெரிந்துகொள்ள வேண்டும். வேட்பாளரின் பெயர்கூட தெரியாமல் பொதுஇடத்தில் தமது கட்சி வேட்பாளரை தாக்கிய விஜயகாந்தை தேர்தல் ஆணையம் ஏன் இதுவரை கைது செய்யவில்லை.

ஒரு வேட்பாளரை அடிக்கிறார் அந்த ஆளு. தேர்தல் அதிகாரிகள் என்ன செய்றாங்க. ஒரு வேனில் வேட்பாளரை போட்டு குத்துறாரு அந்த ஆளு.

என்னிடம் அடி வாங்கினவங்க எல்லாம் மகாராஜா ஆகிவிடுவாங்க என விஜயகாந்த் கூறுகிறார். அப்புறம் எதுக்கு கட்சி. கட்சியை கலைத்துவிட்டு உங்க கல்யாண மண்டபத்துக்கு முன்னாடி அனைவரையும் வரிசையா நிற்க வைத்து, ஒவ்வொருவரையும் முதுகில் நாலு குத்து, மூக்கில் நாலு குத்து, மூக்கை உடைத்து எல்லாரையும் மகாராஜாவாக ஆக்கிவிடு. எதுக்கு எலெக்ஷன். டோட்டலா அந்த கூட்டணியை கலைங்க. கூட்டணி தலைவர்களை வரவழைத்து அவர்கள் வாயில குத்து. குத்தி மகராஜாவாக ஆக்கிவிடு. இவர்கிட்ட அடிவாங்கியவர்களெல்லாம் மகாராஜா ஆகிவிடுவார்களாம். நான் செய்ற காமெடியெல்லாம் அந்த அணியில் பண்ணிக்கிட்டு இருக்காங்க. இவ்வாறு வடிவேலு பேசினார்.


வரும் ஆனா வராது; நடிகர் வடிவேல் பேச்சு

திருவல்லிக்கேணி- சேப்பாக்கம் தொகுதி தி.மு.க. வேட்பாளர் ஜெ.அன்பழகனை ஆதரித்து நடிகர் வடிவேல் இன்று ஐஸ்அவுஸ், ஜாம்பஜார் பகுதிகளில் பிரச்சாரம் செய்தார்.

அப்போது அவர், ‘வீட்டுக்கு ஒரு பெரியவர் இருந்தால் வீடு சிறக்கும். அதே போல் நாட்டுக்கு ஒரு பெரியவர் இருந்தால் நாடு சிறக்கும்.

கலைஞர் பெரியவர் 5 ஆண்டில் நிறைய திட்டங்களை தந்திருக்கிறார். சொன்னதை செய்துள்ளார். அவர் தலைமையில் மீண்டும் ஆட்சி வந்தால் நாடு சிறப்பாக இருக்கும்.

கலைஞர்போல் ஜெயலலிதா அம்மையாரும் திட்டங்களை பட்டியல் போட்டு அறிவித்துள்ளார். கலைஞர் திட்டங்கள் வரும்.

ஆனால் அவங்க ஜெயலலிதா திட்டங்கள் வரும்... ஆனால் வராது அ.தி.மு.க. ஆட்சியில் எதுவும் வராது என்று பேசினார்.

1 comment:

Anonymous said...

காமெடியன் வடவேலு கேள்வி கேட்கும் அளவுக்கு காமெடியன் ஆகிவிட்ட ஹீரோ விஜயகாந்து.. ஹிஹி !!!

//என்னிடம் அடி வாங்கினவங்க எல்லாம் மகாராஜா ஆகிவிடுவாங்க என விஜயகாந்த் கூறுகிறார். அப்புறம் எதுக்கு கட்சி. கட்சியை கலைத்துவிட்டு உங்க கல்யாண மண்டபத்துக்கு முன்னாடி அனைவரையும் வரிசையா நிற்க வைத்து, ஒவ்வொருவரையும் முதுகில் நாலு குத்து, மூக்கில் நாலு குத்து, மூக்கை உடைத்து எல்லாரையும் மகாராஜாவாக ஆக்கிவிடு. //

நியாயமாகத் தன் படுகிறது ....