Thursday, December 22, 2011

முல்லை பெரியாறு அணை பிரச்சினை - திருச்சியில் இன்று கேரள வியாபாரிகள் கடையடைப்பு : தமிழகத்திற்கு ஆதரவாக இருப்போம்.

முல்லை பெரியாறு அணை பிரச்சினை-திருச்சியில் இன்று கேரள  வியாபாரிகள் கடையடைப்பு: தமிழகத்திற்கு ஆதரவாக இருப்போம்

முல்லை பெரியாறு அணை பிரச்சினையில் தமிழகத்துக்கு ஆதரவாக திருச்சியில் இன்று கேரள வியாபாரிகள் கடையடைப்பு போராட்டம் நடத்தினர்.

தமிழகத்தின் தென் பகுதியில் அமைந்து உள்ள 5 மாவட்ட மக்களின் வாழ்வாதாரமாக விளங்கி வரும் முல்லை பெரியாறு அணையை கற்பனை காரணங்களை கூறி இடிக்க முயற்சி செய்யும் கேரள அரசின் செயல்பாட்டை திருச்சி கேரள வாழ் மக்கள் சார்பில் வன்மையாக கண்டித்தனர்.

தமிழகத்தில் 45இலட்சம் மலையாளிகள் சகோதரர்களாக வாழ்ந்துவருகிறோம். எனவே வரும் 28ந்தேதி கேரள அரசிர்க்கு முல்லை பெரியாறு அணை பிரச்சினையில் தமிழகத்தின் நிலைப்பாடே எங்களுடையதும் ஆகும். என்பதனை விளக்கி கூறுவோம்.

முல்லை பெரியாறு அணை பிரச்சினையில் தமிழக அரசின் நிலைப்பாட்டையும் அதன் மேல் நடவடிக்கைகளையும் முழு மனதுடன் வரவேற்பது மட்டுமல்லாமல் ஆதரவு அளித்து அறிக்கை வெளியிட்டனர்.

தமிழகத்தில் வாழும் கேரள மக்களுக்கும், கேரள நிறுவனங்களுக்கும் தமிழக அரசு பாதுகாப்புஅளித்து வருவதை போல் கேரள அரசும் அங்கு வாழும் தமிழக மக்களுக்கு உரிய பாதுகாப்பு அளிக்க வேண்டும்,

தமிழகத்தில் இருந்து சபரி மலை செல்லும் பக்தர்களுக்கு உரிய பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி திருச்சி மலையாளிகள் அசோசியேசன் சங்கம் சார்பில் உம்மண்சாண்டிக்கு தந்தி அனுப்பப்பட்டது. இதன் தொடர்ச்சியாக இன்று திருச்சியில் தொழில் செய்துவரும் கேரளவாசிகள் கடையடைப்பு போராட்டம் நடத்தப்போவதாக அறிவித்தனர்.

அதன்படி இன்று திருச்சியில் மலையாளிகள் கடைகளை அடைத்து போராட்டம் நடத்தினர். திருச்சி சின்னக்கடை வீதி, என்.எஸ்.பி. ரோடு, சிங்கார தோப்பு, பாலக்கரை, தில்லைநகர், சத்திரம் பஸ் நிலையம், காந்தி மார்க்கெட் ஆகிய பகுதிகளில் உள்ள மலையாளிகளுக்கு சொந்தமான நகைக்கடைகள், பேக்கரி, டீக்கடைகள், மளிகை கடைகள், ஹார்டுவேர்ஸ் ஆகியவை அடைக்கப்பட்டு இருந்தன.

No comments: