Thursday, December 22, 2011

முல்லை பெரியாறு பிரச்சினை : பிரதமர் மன்மோகன்சிங் - கேரள முதல்வர் உம்மன்சாண்டி கொடும்பாவி எரிப்பு.

முல்லை பெரியாறு பிரச்சினை: பிரதமர்-கேரள முதல்வர் உருவபொம்மை எரிப்பு: வேலூரில் 38 பேர் கைது

முல்லை பெரியாறு அணை பிரச்சினையில் சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பை ஏற்காத கேரள அரசை கண்டித்து தமிழக ஒடுக்கப்பட்டோர் விடுதலை இயக்கம் சார்பில் மத்திய அரசு அலுவலகம் முன்பு இன்று முற்றுகை போராட்டம் நடந்த போவதாக அறிவித்து இருந்தனர்.

அதன்படி வேலூர் தலைமை தபால் நிலையம் முன்பு இன்று முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். மாவட்ட செயலாளர் தமிழ்செல்வன் தலைமை தாங்கினர்.

அப்போது பிரதமர் மன்மோகன்சிங், கேரள முதல்வர் உம்மன்சாண்டி ஆகியோரின் உருவ பொம்மையை எரித்தனர். மத்திய அரசு, கேரள அரசை கண்டித்து கோஷமிட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

இதுபற்றி தகவல் அறிந்ததும் வேலூர் தெற்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் அண்ணாதுரை தலைமையில் போலீசார் விரைந்து வந்தனர். உருவபொம்மையை எரித்த 10 பெண்கள் உள்பட 38 பேரை கைது செய்தனர்.

No comments: