Friday, August 5, 2011

மன அழுத்தத்தால் தோல் நோய் ஏற்படும் : ஆய்வில் புதிய தகவல்.

மன அழுத்தத்தால் தோல் நோய் ஏற்படும்:    ஆய்வில் புதிய தகவல்

மன அழுத்தம் காரணமாக தோல் நோய் ஏற்படும் என்று ஆய்வில் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.

மருத்துவ வல்லுனர்கள் மனஅழுத்தமும், தோல் நோய்களுக்கும் உள்ள தொடர்புகள் பற்றிய ஆய்வை மேற்கொண்டனர். இதில் தெரியவந்துள்ள விவரங்கள் வருமாறு:-

மன அழுத்தம், விரக்தி, மற்றும் தோல் நோய் ஆகிய வற்றுக்கு இடையே ஒரு கலவையான தொடர்பு இருக்கிறது. மனிதர்களுக்கு மன அழுத்தம் ஏற்படும் போது, உடலில் மாற்றங்கள் ஏற்படுகின்றன. அப்போது ஒரு வகை ரசாயனம் தோலினால் வெளியேற்றப்படுகிறது. அதன் பிறகு இந்த ரசாயன பொருள் தோலின் மேல் பகுதியில் தொற்று நோய் ஏற்படாமல் தடுக்கும் எதிர்ப்பு சக்தியை குறைக்கிறது. இதனால் தோலில் கொப்புளங்கள், தடிப்புகள், படர் தாமரை போன்ற பாதிப்புகள் உண்டாகின்றன.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments: