Tuesday, July 19, 2011

சென்னையில் கலாநிதி மாறன்- தயாநிதி மாறன் பற்றி பரபரப்பு புத்தகம் வெளியீடு .



சென்னையில் சன் டிவி அதிபர் கலாநிதி மாறன் பற்றியும், மத்திய முன்னாள் அமைச்சர் தயாநிதி மாறன் பற்றி பரபரப்பு புத்தகம் வெளியீடு நடைபெற உள்ளது.

'கேடி சகோதரர்கள், உண்மையும், ஊழலும்' என்ற தலைப்பில் இந்த புத்தகம் எழுதப்பட்டுள்ளது. இதன் வெளியீடு இன்று நடைபெறுகிறது. புதிய தமிழகம் வார இதழின் ஆசிரியர் அன்பழகன் இந்த நூலை எழுதியுள்ளார்.

கலாநிதி மாறன், தயாநிதி மாறன் சகோதரர்களின் ஆரம்ப கால வரலாறு உள்ளிட்ட பல்வேறு பரபரப்பு தகவல்கள் இந்த புத்தகத்தில் இடம் பெற்றுள்ளதாக கூறப் படுகின்றது.

சென்னை பத்திரிக்கையாளர் மன்றத்தில், இப்புத்தகத்தை மூத்த பத்திரிக்கை யாளரும், எழுத்தாளரும், அரசியல் விமர்சகருமான தி.சு.கிள்ளிவளவன் வெளியிடுகின்றார்.

2ஜி ஸ்பெக்ட்ரம் விவகாரம் விஸ்வரூபம் எடுத்தது முதல் கடந்த சில வாரங்களாக சன் டிவி அதிபர் கலாநிதி மாறன் பற்றியும், மத்திய முன்னாள் அமைச்சர் தயாநிதி மாறன் பற்றியும் பரபரப்பான தகவல்கள் வெளிவந்த வண்ணம் உள்ளது.

இந்த நிலையில், இந்த புத்தகம் பெரும் பரபரப்பு ஏற்படுத்தும் என எதி்ர்பார்க்கப் படுகின்றது.

No comments: