Tuesday, July 19, 2011

அபகரிப்பு நிலம் மீட்டு உரியவரிடம் ஒப்படைப்பு ! சேலம் காவல்துறையின் முதல் தீர்வு !

சேலம் நகரத்தில் உள்ள வீராணம் பகுதியில் மன்னார்பளையம் பிரிவு ரோட்டில் சுசிலாதேவிக்கும் அவரது சகோதரி சந்திரவதனி என்பவருக்கும் தங்களின் தாயார் வழி சொத்தாக ஐந்தாயிரம் சதுர அடி நிலம் இருந்தது.

அதில் தன்னுடைய பங்கு நிலத்தை சந்திரவதனி, கடந்த 1996 ம் ஆண்டு சேலம் சிங்க மெத்தை பகுதியை சேர்ந்த பாலசுந்தரம் என்பவரின் மனைவி பத்த்மாவதி என்பவருக்கு விற்றுவிட்டார். அந்த இடம் சமீபகாலம் வரை காலி நிலமாகவே கிடந்தது.

இந்த நிலையில் சேலம் மாநகராட்சி ஒன்பதாவது தி.மு.க உறுப்பினரும், முன்னாள் அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகத்தின் நெருங்கிய ஆதாரவாளரான ஆட்டோ மாணிக்கம் என்பவர் இந்த இடம் நாராயணராவ், கிருஸ்ணமூர்த்தி, மோகன், குப்புத்தாயம்மாள் ஆகியோருக்கு சொந்தாமானது என்று ஒரு போலியான பத்திரம் தயார் செய்து, அதை தனது பினாமி, ராஜா என்பவர் பெயருக்கு கிரையம்செய்து பின்னர் அவரிடமிருந்து துரைசாமி என்பவருக்கு கிரையம் செய்து துரைசாமியிடமிருந்து தனது பெயருக்கு கிரையம் வாங்கிய ஆட்டோ மாணிக்கம், இப்போது அந்த இடத்தில் கட்டிடம் கட்டி அதை அரசு மதுக்கடைக்கு (டாஸ்மாக்) வாடகைக்கு விட்டுள்ளார்.

இடம் ஆட்டோ மாணிக்கத்திடம் இருந்தாலும் அந்த இடத்துக்கான நிலவரியை இப்போதும் சுசீல தேவியும், பத்மாவதியும் தான் கட்டிவருகிரார்கள்.

ஆட்டோ மாணிக்கத்தை எதிர்த்து நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்த பத்மாவதிக்கு சாதகமாக இந்த இடம் பத்மாவதிக்கு சொந்தம் என 15.3.2001ல், தீர்ப்பு கொடுத்தது நீதிமன்றம்.

இந்த தீர்ப்பை நடைமுறைப்படுத்த, பத்மாவதிக்கு துணையாக அரசு அலுவலர்கள் யாரும் முன் வராததால், சேலம் மாவட்ட வருவாய் அலுவலரிடம் முறையீடு செய்தார் பத்மாவதி.

18.7.2007, அன்று விசாரணை செய்த மாவட்ட வருவாய் அலுவலர் இந்த இடம் சுசீலாதேவி மற்றும் பத்மாவதிக்கே சொந்தமானது என மாவட்ட ஆட்சியருக்கு அறிக்கை கொடுத்தார்.

அதையும் யாராலும் நடை முறைபடுத்த முடியவில்லை. காவல்துறையில் புகார் கொடுத்தார் பத்மாவதி. நடவடிக்கை இல்லை. தமிழக ஆட்சி மாற்றத்தை தொடர்ந்து நிலஅபகரிப்பு வழக்குகளை விசாரிக்க காவல் துறையால் தொடங்கப்பட்ட தனிப்பிரிவில் கடந்த மாதம் புகார் கொடுத்தார் பத்மாவதி.

விசாரணைக்கு கூப்பிட்ட காவல்துறையினர் ஆட்டோ மாணிக்கத்தின் பத்திரங்கள் போலியானது என்பதை உறுதி செய்துகொண்டு, அவரை கைது செய்து சிறைக்கு அனுப்பினார்கள்.

சிறைக்குள் இருந்தபடியே, வழக்கறிஞர்களை கலந்து ஆலோசித்தார் ஆட்டோ மாணிக்கம், வழக்கை நடத்தினால் நிச்சயம் உங்களுக்கு தண்டனை கிடைக்கும் என்று ஆலோசனை சொன்னார்கள் வழக்குறைஞர்கள்.

தப்பிக்க முடியாது என முடிவு செய்த மாணிக்கம் சிறையிலிருந்து பிணையில் வந்ததும் நிலத்தை விட்டு விடுகிறேன் எண்ணை விட்டு விடுங்கள் என்று சேலம் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் மயில்வாகனத்திடம் போனார்.

தான் கட்டிய கட்டிடத்தை இடிக்க ஒப்புக்கொண்ட ஆட்டோ மாணிக்கம் தான் அனுபவித்து வந்த நிலைத்த பத்மாவதிக்கும், சுசீலாதேவிக்கும் விட்டுவிடுவதாக எழுதி கொடுத்துவிட்டு போய்விட்டார்

பத்து வருடங்களுக்கு பின்னர் தங்கள் நிலம் தாங்களுக்கு கிடைத்த மகிழ்ச்சியில் காவல்துறைக்கு நன்றி சொன்னார்கள் பத்மாவதியும், சுசீலாதேவியும்.

No comments: