Monday, July 4, 2011

உடல் உறுப்பு தானத்துக்காக தற்கொலை செய்து கொண்ட சிறுமி.

மேற்கு வங்க மாநிலம் நடியா மாவட்டத்தில் உள்ள ஜோர்பரா எனும் பகுதியை சேர்ந்தவர் மிருதுல்சர்கார். இவரது மகன் மோனோ ஜித் (14). மகள் மம்பி சர்கார் (11). கூலித் தொழிலாளியான மிருதுல் தன் குடும்பத்தை கஷ்டப்பட்டு காப்பாற்றி வருகிறார்.

வறுமையில் இருந்தாலும் மோனோஜித், மம்பி இருவரையும் படிக்க வைத்து வருகிறார். கடந்த சில மாதங்களாக மிருதுல் சர்க்காரின் கண்ணில் கோளாறு ஏற்பட்டது. பார்வை குறைபாடுகளால் அவதிப்பட்டார். அவருக்கு கண் அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்று டாக்டர்கள் கூறி இருந்தனர்.

இந்த நிலையில் மோனோ ஜித்தின் சிறு நீரகம் ஒன்று பழுதடைந்தது. மற்றொரு சிறுநீரகம் வேகமாக செயல் இழந்து வருகிறது. அவனுக்கு மாற்று சிறுநீரகம் பொருத்தினால் தான் அவன் உயிர் வாழ முடியும் என்று டாக்டர்கள் தெரிவித்தனர்.

தந்தைக்கு கண் வேண்டும். அண்ணனுக்கு சிறுநீரகம் தேவை என்பதை அறிந்த மம்பி சர்க்கார் மிகவும் வேதனை அடைந்தார். உடல் தானம் பற்றி அறிந்திருந்த அவர் தன் கண், சிறு நீரகங்களை தந்தைக்கும் சகோதரனுக்கும் தானம் செய்யலாம் என்று நினைத்தார்.

கடந்த 27-ந்தேதி மம்பி சர்க்கார் தன் சகோதரி மோனிகாவிடம் தனது உடல் தான முடிவு பற்றி கூறினாள். அதை கேட்ட மோனிகா சிரித்தபடி உனக்கு என்ன பைத்தியமா என்று சொல்லியபடி பள்ளிக் கூடத்துக்கு புறப்பட்டுச் சென்று விட்டார்.

தந்தை மிருதுல் வேலைக்கு சென்று விட்டார். வீட்டில் தனியாக இருந்த மம்பி, தன் கண்கள், சிறு நீரகங்களை அகற்றி தந்தை, சகோதரனுக்கு பொருத்தவும் என்று கடிதம் எழுதி வைத்து விட்டு பூச்சி மருந்து குடித்து தற்கொலை செய்து கொண்டாள்.

இதை அறியாத மிருதுல் மற்றும் உறவினர்கள் மம்பி உடலை தகனம் செய்து விட்டனர். இரண்டு நாட்கள் கழித்தே மம்பி எழுதி வைத்திருந்த கடிதம் கிடைத்தது. அதை படித்து குடும்பத்தினர் சோகத்தில் ஆழ்ந்தனர்.

No comments: