Monday, July 4, 2011

இந்தியாவில் முதன் முறையாக “ரோபோ” மூலம் புற்று நோய் ஆப்ரேசன்.

உலகில் முதன்முறையாக   நோயாளிக்கு “ரோபோ” மூலம்   புற்று நோய் ஆபரேசன்;   வெற்றிகரமாக நடந்ததாக    டாக்டர்கள் பேட்டி

ரஜினி நடித்த எந்திரன் படத்தில் மனித ரோபோ ஒன்று ஆப்ரேசன் செய்வது போன்ற காட்சி இடம் பெற்றிருந்தது. அதைப் பார்த்த பலர் ரோபோவால் ஆப்ரேஷன் செய்ய முடியுமா என்று ஆச்சரியம் அடைந்தனர். தற்போது அதை உண்மையாக்கும் விதத்தில் ஐதராபாத்தில் உள்ள ஏசியன் இன்ஸ்டிடியூட் ஆப் கேஸ்ட்ரோ என்ட்ராலஜி மருத்துவமனையில் புற்று நோயாளி ஒருவருக்கு “ரோபோ” மூலம் ஆப்ரேசன் நடந்துள்ளது.

அவரது பெயர் வீரபத்தராவ் (45) ஆந்திர மாநிலம் வாரங்கால்லைச் சேர்ந்தவர். இவரது ஜீரண மண்டல பகுதியில் புற்று நோய் தாக்கி இருந்தது. புற்று நோய் பாதித்த பகுதியை ரோபோ மூலம் அகற்ற மருத்துவமனை சேர்மன் நாகேஸ்வர ரெட்டி முடிவு செய்தார்.

இதற்காக சிங்கப்பூரில் இருந்து டாக்டர்கள் லூயிசிஷி, கோகிக் யூ லாரன்ஸ் ஆகியோர் ஐதராபாத்துக்கு வரவழைக்கப்பட்டனர். அவர்கள் தலைமையில் வீரபத்ரராவுக்கு “ரோபோ” மூலம் என்டோஸ் கோப்பிக் ஆப்ரேஷன் நடந்தது. அந்த ரோபோ 17 நிமிடங்களில் அவரது ஜீரண மண்டலத்தில் புற்று நோய் தாக்கிய பகுதியை வெற்றிகரமாக அகற்றி சாதனை படைத்தது.

இது பற்றி நாகேஸ்வர ரெட்டி நிருபர்களிடம் கூறியதாவது:-

உடல் பகுதியில் புற்று நோய் பாதித்த பகுதியை அகற்றும் ஆப்ரேசனை மிகவும் நுண்ணியமான முறையில் செய்ய வேண்டும். இதனால் இந்த ஆப்ரேசனை டாக்டர்கள் செய்ய சுமார் 6 மணி நேரமாவது ஆகிவிடும். ஆனால் “ரோபோ” வானது 17 நிமிடத்தில் புற்று நோய் பாதித்த பகுதியை முழுமையாக அகற்றி விட்டது.

ரோபோ மூலம் செய்யப்படும் ஆப்ரேசனுக்கு அதிகம் செலவு செய்யத் தேவை இல்லை. டாக்டர்கள் குழுவினர் சாதாரணமாக ஒரு ஆப்ரேசன் செய்ய ரூ.1 லட்சம் வரை ஆகி விடுகிறது. ஆனால் “ரோபோ” ஆப்ரேசனுக்கு ரூ.5 ஆயிரம் தான் ஆகும். ஆப்ரேசன் ரோபோக்கள் அதிக அளவில் தயாரிக்கப்பட்டால் நிறைய உயிர்களை காக்கலாம் என்றார்.

No comments: