Monday, July 4, 2011

இலங்கை கடற்படை மீண்டும் அட்டூழியம்-14 ராமேஸ்வரம் மீனவர்களை பிடித்துச் சென்றது.



இலங்கை கடற்படையின் அட்டூழியத்திற்கு அளவே இல்லாமல் போய் விட்டது. சமீபத்தில்தான் 23 ராமேஸ்வரம் மீனவர்களை கடத்திச் சென்று தமிழகத்தின் கடும் எதிர்ப்பைத் தொடர்ந்து விடுவித்த இலங்கை கடற்படை காடையர்கள், இன்று ராமேஸ்வரத்தைச் சேர்ந்த 14 மீனவர்களை கடத்திக் கொண்டு போய் விட்டனர்.

இலங்கை கடற்படையினரின் இந்த அட்டகாசத்தால் ராமேஸ்வரம் மீனவர்கள் கடும் கொதிப்படைந்துள்ளனர்.

இன்று காலை தனுஷ்கோடி அருகே நாலாம் திட்டு என்ற இடத்தில், ராமேஸ்வரத்தைச் சேர்ந்த மீனவர்கள் சிலர் மீன் பிடித்துக் கொண்டிருந்தனர்.

அப்போது அங்கு வந்த இலங்கை கடற்படை காடையர்கள், தமிழக மீனவர்களை சுற்றி வளைத்தனர். பின்னர் படகில் இருந்த 14 மீனவர்களையும் அவர்களது படகோடு சேர்த்து கடத்திச் சென்று விட்டனர்.

கடற்படையிடமிருந்து தப்பி வந்த மீனவர்கள் இத்தகவலை சக மீனவர்களிடம் தெரிவித்தனர். மீன்வளத்துறை அதிகாரிகளிடமும் இதுகுறித்து புகார் கொடுக்கப்பட்டது.

இலங்கை கடற்படையினரின் இந்த அடாவடி நடவடிக்கையால் ராமேஸ்வரம் மீனவர்கள் கடும் கொதிப்படைந்துள்ளனர்.

No comments: