Monday, July 4, 2011

இலங்கை கடற்படை பிடித்து சென்ற 14 மீனவர்கள் இந்திய கடற்படையிடம் ஒப்படைப்பு.

இலங்கை கடற்படை பிடித்து சென்ற 14 மீனவர்கள் இந்திய கடற்படையிடம் ஒப்படைப்பு

ராமேஸ்வரத்தில் இருந்து கடந்த 20-ந்தேதி மீன்பிடிக்க சென்ற மீனவர்கள் 23 பேரை இலங்கை கடற்படையினர் சிறை பிடித்துச் சென்றனர். அவர்கள் விடுவிக்கப்பட்டு கடந்த 30-ந் தேதி ராமேசுவரம் வந்து சேர்ந்தனர்.

இந்த சம்பவம் நடந்து ஒரு வாரம் கூட முடியாத நிலையில் தனுஷ்கோடி கம்பிபாடு கடற்கரையில் இருந்து மீன் பிடிக்க சென்ற மீனவர்கள் 4-வது மணல் தீடை அருகே மீன்பிடித்து கொண்டிருந்தபோது அங்கு வந்த இலங்கை கடற்படையினர் எல்லை தாண்டி வந்ததாக கூறி மீனவர்கள் 14 பேரை படகுடன் சிறை பிடித்து சென்றனர்.

இந்த நிலையில், 14 மீனவர்களையும் அவர்களின் படகையும் சர்வதேச கடல் எல்லையில் வைத்து இந்திய கடற்படையினரிடம் ஒப்படைத்துவிட்டனர். அவர்களை இந்திய கடற்படையினர் கரைக்கு அழைத்து வருகின்றனர்.

No comments: