Thursday, July 28, 2011

பூர்ண தனுராசனம், பத்மாசனம், வஜ்ராசனம்.

உடல் உறுப்புகளை தூண்டும் பூர்ண தனுராசனம்.
உடல் உறுப்புகளை தூண்டும் பூர்ண தனுராசனம்

வட மொழியில் தனுஷ் என்றால் வில். பூர்ணம் என்றால் பூர்த்தி அல்லது முழுமை என்று பொருள். எனவே இந்த யோக நிலையில் ஒரு முழு வில்லை போன்று உடலை வளைக்க வேண்டும்.

செய்முறை:

உடல், வயிறு பூமியில் படுமாறு குப்புறப்படுத்துக் கொள்ள வேண்டும். உங்கள் தலை, கழுத்து, தாடை, மார்பு, தொடைகள் மற்றும் முழங்கால்களை ஒரே நேரத்தில் பின்புறமாக வளைக்கவும். தாடையை தரையிலிருந்து மேலே எழுப்ப வேண்டும். அதே நேரத்தில் அடிவயிறு, கழுத்து, தலை ஆகியவற்றை மேல் நோக்கி உயர்த்த வேண்டும்.

அதாவது தலை, தோற்பட்டை, மார்பு மற்றும் தொப்புள் பகுதிகள், உங்கள் இடுப்புப்பகுதிகள், தொடைகள், முழங்கால்களுக்கு அடுத்தபடியாக இருக்குமாறு கொண்டு வர வேண்டும். பாதங்களையும் முழங்கால்களையும் சேர்க்க வேண்டும். மேல் நோக்கிப் பார்க்கவும். கணுக்கால்களை பிடித்து வேகமாக இழுக்கவும்.

இப்போது மேலே பார்த்தபடி இருக்கவும். முதுகெலும்பை முடிந்தவரை வில்போல் வளைக்க வேண்டும். இதே நிலையில் மூச்சைப் பிடித்துக் கொண்டு இருக்கவும். தொடைகள், அடி வயிறு, மார்பு ஆகியவை தரையில் படாதவாறு பார்த்துக் கொள்ளவும்.

இதே நிலையில் ஆடாமல் அசையாமல் இருக்கவும். இதே நிலையில் இருப்பதை மெதுவாக அதிகரிக்கவும். குறைந்தது 5 வினாடிகளாவது இதே நிலையில் நீடிக்கவும். பிறகு மெதுவாக பழைய நிலைக்கு திரும்பவும்.

பலன்கள்:-

உடல் வலுவை கூட்டுகிறது. அரை வில் போன்ற நிலையில் இருப்பது, கிட்னி, சுரப்பிகள் மற்றும் மறு உற்பத்தி உடல் உறுப்புகளை தூண்டும்.


பத்மாசனம்.

பத்மாசனம்:

செய்முறை:

நிமிர்ந்து சம்மணமிட்டு உட்கார்ந்து இடது காலை வலது கால் தொடையின் மீதும், வலது காலை இடது கால் தொடையின் மீதும் வைத்து நேராக நிமிர்ந்து உட்கார வேண்டும்.நம் பாதங்கள் மேல்புறத்தில் பார்த்தது போல இருக்க வேண்டும். குண்டாக இருப்பவர்களுக்கு சற்று சிரமமாக இருக்கும். இது பழக பழக சரியாகி விடும்.

பயன்கள் :

இடுப்பு பலப்படும், உடலில் ரத்தம் நன்கு சுத்திகரிக்கபடும், கூன் முதுகு சரியாகும், உடலில் சுறுசுறுப்பு உண்டாகும்.


வஜ்ராசனம்.

வஜ்ராசனம்

செய்முறை:

இரு கால்களை பின்புறமாக மடக்கி உட்கார்ந்து நம் பின்புறங்கள் இரு கால்களின் மேல் இருக்க வேண்டும். இதே நிலையில் 15 நிமிடம் இருக்கவும்.

பயன்கள்:

அஜீரணம், வயிற்றில் உள்ள கோளாறுகள் குணமாகும். முதுகு தண்டுவடம் வலுப்பெறும்.

No comments: