Monday, July 25, 2011

குறாஞ்சாசனம், கோமுக ஆசனம், நீரிழிவைப் போக்கும் ஷலபாசனம்.

குறாஞ்சாசனம்.
குறாஞ்சாசனம்

செய்முறை:

இரு கால்களை நன்றாக நீட்டவும். வலது காலை வலது புட்டத்தின் வெளியே இருக்குமாறு மடித்து வைக்கவும். மூச்சை இழுத்தபடியே இடது காலை நெஞ்சுக்கு நேராக கொண்டு வரவும். கைகளை மேலே பாதத்தை கோர்த்து பிடித்தாற்போல் பிடித்த படி மூச்சை வெளியே விட்டு படத்தில் உள்ளபடி பிடிக்கவும். 20 எண்ணும் வரை இருந்து பின்னர் காலை கீழே போடவும். மூச்சை இழுத்து விட்டு பின் வலது கால் பக்கம் செய்யவும். 4 முதல் 6 தடவைகள் செய்யவும்.

பலன்கள்:

இடுப்பு வலி, வயிற்று வலி அகலும், கால்களின் நரம்புகளின் பலம் அதிகரிக்கும். இதய பலவீனம் அகன்று பலமாகும். வயிற்றினுள் உள்ள உள்உறுப்புகள் அபரிமிதமான பலத்தை பெறுகின்றன.


கோமுக ஆசனம்.
கோமுக ஆசனம்

நினைவாற்றலை அதிகரிக்கும் யோகாசனங்கள் பற்றி டாக்டர் ராஜேஸ்வரி விவரிக்கிறார்.

குத்துகால் இட்டு உட்காரவும். வலது காலை மடித்து இடது கால், தொடையின் மேல் ஆரம்ப பகுதியில் வைக்கவும். அதேபோல் இடது காலை மடித்து வலது தொடையின் அருகில் படத்தில் காட்டியது போல் வைக்கவும். நேராக நிமிர்ந்து இரண்டு கைகளையும் பின்னால் கொண்டு சென்று ஒன்றை ஒன்று பிடித்துக் கொள்ளவும். ஆழமாக மூன்று முறை மூச்சை இழுத்து விடவும். இதேபோல வலது காலை மடித்து மறுபக்கம் செய்யவும்.

நன்மைகள்:

கோபம் குறைந்து மன அமைதி ஏற்படும். மூட்டு வலி குணமாகும், ஞாபக சக்தி கிடைக்கும். முதுகு நிமிரும். சுவாசம் சீராகும். தோள்பட்டை மற்றும் மேல் முதுகு வலி நீங்கும்.


நீரிழிவைப் போக்கும் ஷலபாசனம்.
நீரிழிவைப் போக்கும் ஷலபாசனம்


ஷலபாசனம் என்பதற்கு தாமரை நிலை என்று கூறப்படுகிறது. பஷ்சிமோத்தாசனம் மற்றும் ஹாலசனம் ஆகியவற்றிற்கு எதிர்மறை நிலை என்று சுருக்கமாக அழைக்கலாம்.

பலன்கள்:-

நீரிழிவு நோய்க்கு அதிக பலன் தரும். நுரையீரலின் வலிமையை அதிகரிக்கிறது. ஆஸ்துமா நோய்க்கு மிகவும் நல்லது. அடி முதுகு வலியை போக்கும். அஜீரணத்தை போக்கி செரிமானத்தை சரியாக்கி கல்லீரல் பலம் பெறுகிறது. பகலில் தூக்கம் வருவதை தடுக்கிறது. சிறுநீர் கடுப்பு நோய்க்கு நல்ல பலனைத் தருகிறது.

ரத்தத்தில் சிவப்பு அணுக்கள், வெள்ளை அணுக்கள் ஆகியவை சரியான விகிதாச்சாரத்தில் இருக்க உதவுவதுடன் ரத்த ஓட்டத்தையும் சரி செய்கிறது. இந்த ஆசனத்தை தொடர்ந்து செய்து வந்தால் இரைப்பை புண், குடல் புண், ஆஸ்துமா, இருதய பலவீனம், உதர விதான இறக்கம் ஆகிய குறைபாடுகள் ஏற்படுவதில்லை. நுரையீரலை பலப்படுத்துகிறது.

நுரையீரல் நோய், ஆஸ்துமா ஆகிய நோய்களுக்கு அதிக பலனைத் தருகிறது. கூன் முதுகை நிமிர்த்துகிறது. தூக்கமின்மை வியாதியைப் போக்குகிறது. ரத்த ஓட்டத்தை துரிதப்படுத்துகிறது. சோம்பல், ஞாபக மறதி, கவனமின்மை ஆகியவற்றை போக்கிவிடும்.

அஜீரணம், பசியின்மை, உடல் சோர்வு மற்றும் மார்பு சளி ஆகியவை இந்த ஆசனத்தை தவறாது செய்ய பழகினால் தீரும். பிரசவித்தபின் ஏற்படும் பெருத்த வயிற்றை குறைக்கும். மாதவிடாய் கோளாறுகளை சரி செய்யும்.

1 comment:

இராஜராஜேஸ்வரி said...

பயனுள்ள பகிர்வுக்கு நன்றி. பாராட்டுக்கள்.