Monday, July 18, 2011

சமச்சீர் கல்வி தீர்ப்பு : கருணாநிதி கருத்து.

சமச்சீர் கல்வி தீர்ப்பு :கருணாநிதி கருத்து

1-ஆம் வகுப்பு முதல் 10-ஆம் வகுப்பு வரை அனைத்து வகுப்புகளுக்கும் சமச்சீர் கல்வி திட்டத்தை இந்த ஆண்டே அமல்படுத்த வேண்டும் என்று சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.இதனையடுத்து சமச்சீர் கல்வி வழக்கில் சென்னை ஐகோர்ட் வழங்கிய தீர்ப்பை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்யப்படும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.

இந்நிலையில் இத்தீர்ப்பு பற்றி தி மு க தலைவர் கருணாநிதி கூறுகையில் சமச்சீர் கல்வி வழக்கின் தீர்ப்பு யாருக்கும் வெற்றி ,தோல்வி அல்ல ,இத்தீர்ப்பு நடுத்தர -ஏழை மாணவர்களுக்கு கிடைத்த வரபிரசாதமாக அரசு கருத வேண்டும் உச்சநீதிமன்ற கருத்தை கேட்டே சமச்சீர் கல்வி கொண்டு வரப்பட்டது உயர்நீதிமன்ற தீர்ப்பு எதிர்கால சமுதாயத்திற்கு வழங்கப்பட்ட வழிகாட்டல் என தெரிவித்தார் .

No comments: