Wednesday, June 8, 2011

கே.பி.என். பேருந்தின் கோரவிபத்தில் சிலதுளிகள்.


கே.பி.என். பேருந்து எங்கு விபத்துக்குட்பட்டாலும் உடனடியாக அதன் தடயத்தை அழித்துவிடும் ஆற்றல் பெற்ற நிறுவனம். அதனால் கே.பி.என். பேருந்தின் விபத்துகளின் வரலாறு யாருக்கும் தெரியாது.

இதனாலேயே கே.பி.என். பேருந்து பயணம் என்றால் விபத்தில்லா பயணம் என்னும் ஒரு மாய சூழ்நிலையை உருவாக்கி ஒர் நம்பகத் தன்மையை தக்கவைத்துக் கொண்டது.

முதன்முதலாக அதன் கோரமுகம் வெளிஉலகுக்கு தெரியவந்துள்ளது.



விபத்து நடந்தது எப்படி? உயிர் தப்பிய பஸ் டிரைவர் பேட்டி
விபத்து நடந்தது எப்படி? உயிர் தப்பிய பஸ் டிரைவர் பேட்டி

சென்னையில் இருந்து பொள்ளாச்சி சென்ற தனியார் ஆம்னி பஸ் வேலூர் மாவட்டம் காவேரிப்பாக்கம் அருகே அவலூர் என்ற இடத்தில் பள்ளத்தில் திடீரென்று கவிழ்ந்து தீப்பிடித்தது. இதில் 22 பேர் பலியானார்கள். இந்த பஸ்சை சேலம் தாசநாய்க்கன்பட்டியை சேர்ந்த கோவிந்தசாமி என்பவரின் மகன் நாகராஜன் (வயது51) ஓட்டி வந்தார்.

விபத்து குறித்து வேலூரில் போலீசாரிடம் சரணடைந்த டிரைவர் நாகராஜன் கூறியதாவது:-

பஸ் சென்னை கோயம்பேட்டில் இருந்து நேற்று இரவு 9.15 மணிக்கு புறப்பட்டது. இரவு சுமார் 11 மணிக்கு வேலூர் மாவட்டம் காவேரிப்பாக்கம் அருகே வந்தது. அப்போது முன்னால் சென்ற லாரியை முந்த முயன்றேன். அப்போது அந்த லாரி இடது பக்கத்தில் இருந்தது வலது பக்கம் திரும்பியது.

இதனால் பஸ் முன்னால் சென்ற லாரி மீது மோதியது. மோதிய வேகத்தில் பஸ் எனது கட்டுப்பாட்டை இழந்து அருகில் இருந்த பாலத்தில் மோதியது. அதைத் தொடர்ந்து பின்னால் வந்த லாரி பஸ் மீது மோதியதால் பஸ் திடீரென்று பாலத்தை உடைத்து கொண்டு பக்கவாட்டில் இருந்த பள்ளத்தில் கவிழ்ந்தது.

லாரி மோதிய வேகத்தில் பஸ்சின் டீசல் டேங்கரில் கசிவு ஏற்பட்டது. பஸ் கவிழ்ந்த வேகத்தில் பஸ்சின் கதவு அடிப்பாகத்தில் சிக்கி கொண்டது. நான் கண்ணாடியை உடைத்து கொண்டு தப்பினேன். மற்ற பயணிகள் மேலே வர கண்ணாடியை உடைக்க முயற்சி செய்தேன். அதற்குள் டீசல் முழுவதும் கசிந்து திடீரென்று தீப்பிடித்தது.

தீப்பிடித்த வேகத்தில் பஸ் முழுவதும் தீ மளமளவென்று எரிய தொடங்கியது. நான் அந்த வழியாக வந்தவர்களை உதவிக்கு அழைத்தேன். ஆனால் யாரும் வரவில்லை. இதனால் பஸ்சில் பயணம் செய்த 22 பேரும் தீயில் கருகி இறந்தனர்.

அதைத் தொடர்ந்து அங்கிருந்தவர்கள் என்னை அருகில் உள்ள போலீஸ் நிலையத்தில் சரணடைய கூறினார்கள். பின்னர் நான் வேலூர் வடக்கு போலீஸ் நிலையத்தில் சரணடைந்தேன., இவ்வாறு அவர் கூறினார்.


விபத்து துளிகள்
விபத்து துளிகள்

மின்னல் வேகத்தில் வந்து பாலத்தில் மோதிய பஸ் தீப்பிடித்தபடியே தலைக்குப்புற 15 அடி பள்ளத்தில் கவிழ்ந்துள்ளது. வாசல் இருந்த பக்கம் தரையில் சிக்கிக் கொண்டதால் பயணிகளால் வெளியே வரமுடியவில்லை. டீசல் டேங்க் வெடித்ததால் பஸ் முழுவதுமாக தீப்பிடித்து எரிந்தது. விபத்து நடைபெற்றது நள்ளிரவு நேரம் என்பதால் அக்கம் பக்கத்தில் இருந்தவர்களால் உடனடியாக சென்று தீயை அணைக்க முடியவில்லை.

காஞ்சீபுரம், வாலாஜா, வேலூர் உள்ளிட்ட இடங்களில் இருந்து தீயணைபபு வீரர்கள் விரைந்து வந்து தீயை அணைத்தனர். ஆனால் அதற்குள் தீயில் சிக்கிய பயணிகளின் உடல்கள் எரிந்து சிறு சிறு துகள்களாக மாறியது. ஒருசிலரின் மண்டை ஓடுகள் கிடைத்துள்ளன. பலரது கை, கால்களும் கரிக்கட்டைகளாக கிடந்தன.

பஸ்சில் பிடித்த தீ முழுவதுமாக அணைக்கப்பட்டதும் எலும்புக்கூடு போல பஸ் காட்சி அளித்தது. இதனை ராட்சத கிரேன் கொண்டு மேலே தூக்கினர். அப்போது பஸ்சில் கருகி கிடந்த உடல்களின் பாகங்கள் பொலபொலவென்று கீழே விழுந்தது. இதனை மீட்பு பணியில் ஈடுபட்டிருந்த தீயணைப்பு வீரர்களும் போலீசாரும் பொறுக்கி எடுத்தனர். ஒரு சிலரின் உடல் பாகங்கள் கையில் எடுக்க முடியாத அளவுக்கு சிதைந்து காணப்பட்டன. அவைகளை மணல் அள்ளுவது போல அள்ளி பாலித்தீன் கவர்களில் போட்டனர்.

விபத்து நடைபெற்ற இடத்தில் பஸ்சின் என்ஜின், டயர் உள்ளிட்டவை ஆங்காங்கே சிதறிக் கிடந்தது. பாலத்தில் மோதிய வேகத்தில் பஸ்சின் பாகங்கள் நொறுங்கி தூக்கி வீசப்பட்டுள்ளது. டீசல் டேங்க் அருகில் உள்ள சைலன்சர்களும் மோதிய வேகத்தில் உடைந்துள்ளது.

இதனால் அதில் டீசல் கொட்டி தீப்பிடித்துள்ளது.விபத்தில் சிக்கிய கே.பி.என். சொகுசு பஸ் படுக்கை வசதி கொண்டது. அதில் உள்ள இருக்கைகளில் சொகுசான பயணத்துக்காக ஏராளமான பஞ்சுகள் திணிக்கப்பட்டுள்ளன. இதனால் எளிதில் அதில் தீப்பற்றிக் கொண்டுள்ளது. குளிர்சாதன வசதி கொண்ட பஸ் என்பதால் திறக்க முடியாத நிலையில் கண்ணாடிகள் பொருத்தப்பட்டிருந்தன.

இதுவும் பயணிகள் தப்பிப்பதற்கு முடியாமல் போய்விட்டது. விபத்தில் கருகிய 22 பேரின் உடல்களும் வாலாஜா அரச ஆஸ்பத்திரி வளாகத்தில் வரிசையாக அடுக்கி வைக்கப்பட்டிருந்தது. அந்த உடல்களில் தலைப்பகுதி எது? கால் பகுதி எது? என்று தெரியாத அளவுக்கு சிதைந்து காணப்பட்டது. அந்த பகுதியை சுற்றி வெள்ளை துணியால் போலீசார் கட்டி இருந்தனர்.

12 பயணிகள் அடையாளம் தெரிந்தது : 10 பேர் உடல் கரி கட்டையாகி விட்டது
12 பயணிகள் அடையாளம் தெரிந்தது: 10 பேர் உடல் கரி கட்டையாகி விட்டது

பலியான 22 பயணிகளில் 12 பயணிகள் உடல் அடையாளம் இன்று காலை கண்டுபிடிக்கப்பட்டது.

அவர்கள் விவரம் வருமாறு:-

1. வெங்கடேசன்- பொள்ளாச்சி. 2. சுதா-பொள்ளாச்சி 3. டாக்டர் சுப்பிரமணியம் - பொள்ளாச்சி 4. விஜயகுமார்- பொள்ளாச்சி 5. திவ்யா- பொள்ளாச்சி அருகே உள்ள நல்லாம் பள்ளி. 6. சுமிதா-முகப்பேர், சென்னை 7. பரத்- ஒரிசா 8. மாசானகார்த்திக்- மதுரை. 9. செல்வராஜ்- கோடம்பாக்கம், சென்னை. 10. விஜயலட்சுமி- உடுமலைப்பேட்டை 11. பிரணவராஜ்- உடுமலைப்பேட்டை 12. விமலா- உடுமலைப்பேட்டை

மற்ற 10 பயணிகள் உடல் முழுமையாக கருகி கரிக்கட்டை ஆகிவிட்டது.

அவர்கள் யார்-யார் என்று கண்டுபிடிக்க முடியாதபடி சிதைந்து விட்டது. என்றாலும் உறவினர்கள், நண்பர்கள் உதவியுடன் அடையாளம் காணும் முயற்சி நடந்து வருகிறது.

உடல்களை உறவினர்கள் வந்து பார்த்து அடையாளம் காணுவதற்கு வசதியாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

விபத்தில் பலியானவர்களின் உடல்கள் வைக்கப்பட்டு இருந்த வாலாஜா அரசு ஆஸ்பத்திரி சோகத்தில் மூழ்கியது. விபத்தில் பலியானவர்கள் உறவினர்கள் அங்கு திரண்டு இருந்தனர். அவர்கள் கதறி அழுதது நெஞ்சை உருக்குவதாக இருந்தது. பெண்கள் பலர் தரையில் புரண்டு அழுதனர். விபத்தில் இறந்தவர்களின் உடல்களை பிரேத பரிசோதனை செய்ய வாலாஜா அரசு ஆஸ்பத்திரி இணை இயக்குனர் டாக்டர் அல்லிகிருபாகரன் தலைமையில் 7 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டு இருந்தது.

இந்த குழுவினர் உடனுக்குடன் பிரேத பரிசோதனை செய்தனர். பிரேத பரிசோதனை அறிக்கை எழுதுவதற்கு 20-க்கும் மேற்பட்ட போலீசார் தயார் நிலையில் இருந்தனர். அவர்கள் உடனுக்குடன் அறிக்கை தயாரித்து உறவினர்களிடம் கையெழுத்து வாங்கி உடல்களை ஒப்படைத்தனர்.

இந்த கோர விபத்தில் 5 பெண்கள் பலியாகி உள்ளது தெரியவந்துள்ளது. 22 பயணிகள் பயணம் செய்துள்ளனர். இதில் 5 பேர் பெண்கள் ஆவர். விபத்தில் 5 பேரும் பலியாகி விட்டனர். திவ்யா, சுதா, விஜயலட்சுமி, விஜயலட்சுமியின் உறவுப்பெண் ஜெயராணி ஆகியோர் பரிதாபமாக உயிர் இழந்தனர்.

விபத்தில் சிக்கிய ஆம்னி பஸ்சில் 29 பயணிகள் பயணம் செய்ய முடியும். அதற்கான படுக்கை வசதி மட்டுமே உள்ளது. 27 இடங்கள் மட்டுமே நிரம்பியது. இரண்டு இடங்கள் காலியாக கிடந்தன. இதில் 4 பேர் வேலூரில் இருந்து பொள்ளாச்சிக்கு பயணம் செய்ய காத்திருந்தனர்.

வேலூரை சேர்ந்த தாமரை என்ற பெண் குடும்பத்தோடு பொள்ளாச்சி செல்ல முன்பதிவு செய்திருந்தார். இரவு 10.15 மணிக்கு வேலூருக்கு அந்த பஸ் செல்ல வேண்டும். பஸ்சில் பயணம் செய்ய தாமரை மற்றும் அவரது குழந்தைகள் தயாராக காத்து நின்றனர். நீண்ட நேரமாகியும் பஸ் வரவில்லை. அதன்பிறகுதான் அந்த பஸ் தீப்பிடித்து எரிந்த விவரம் அவர்களுக்கு தெரிந்தது. அவர்கள் பயணத்தை ரத்து செய்து விட்டு அதிர்ச்சியுடன் வீடு திரும்பினர்.


தீயில் கருகி வெடித்து துகள்களான உடல்கள்
தீயில் கருகி வெடித்து துகள்களான  உடல்கள்

தீயில் சிக்கிய பயணிகளின் உடல்கள் எரிந்து சிறுசிறு துகள்களாக மாறியது. ஒருசிலரின் மண்டை ஓடுகள் கிடைத்துள்ளன. பலரது கை, கால்களும் கரிக்கட்டைகளாக கிடந்தன.

6 மூட்டைகளில் கட்டப்பட்ட உடல்கள்

பஸ்சில் பிடித்த தீ முழுவதுமாக அணைக்கப்பட்டதும் எலும்புக்கூடு போல பஸ் காட்சி அளித்தது. இதனை ராட்சத கிரேன் கொண்டு மேலே தூக்கினர். அப்போது பஸ்சில் கருகி கிடந்த உடல்களின் பாகங்கள் பொலபொலவென்று கீழே விழுந்தது. இதனை மீட்பு பணியில் ஈடுபட்டிருந்த தீயணைப்பு வீரர்களும் போலீசாரும் பொறுக்கி எடுத்தனர். ஒரு சிலரின் உடல் பாகங்கள் கையில் எடுக்க முடியாத அளவுக்கு சிதைந்து காணப்பட்டன.

அவைகளை மணல் அள்ளுவது போல அள்ளி பாலித்தீன் கவர்களில் போட்டனர். இறந்தவர்களின் உடல்கள் 6 மூட்டைகளில் வாலாஜா அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டனர்.

வெளிச்சம் இல்லாததால் தாமதமான மீட்பு பணி

காஞ்சீபுரத்தில் இருந்து சுமார் 25 கி.மீ. தூரத்தில் உள்ள அவலூர் என்ற இடத்தில்தான் இந்த விபத்து நடைபெற்றது. இந்த இடம் இருள் சூழ்ந்து காணப்பட்டதால் மீட்பு பணிகளை மேற்கொள்வதில் தாமதம் ஏற்பட்டது.

6 எமர்ஜென்சி விளக்குகள் உடனடியாக வரவழைக்கப்பட்டது. இந்த விளக்கு வெளிச்சத்தில்தான் மீட்பு பணிகள் நடைபெற்றன.

பஸ்சில் தனியாக கிடந்த கால்

தீயில் எரிந்து உருக்குலைந்த பஸ் ராட்சத கிரேன் மூலம் தூக்கப்பட்டு அருகில் இருந்த வயல்வெளியில் நிறுத்தப்பட்டிருந்தது. இந்த பஸ்சுக்குள் வாலிபரின் கால் ஒன்று தனியாக கருகிய நிலையில் கிடந்தது. அவர் அணிந்திருந்த ஷு சாக்சும் காலில் ஒட்டியபடியே காணப்பட்டது.

படுக்கை வசதி கொண்ட பஸ்

விபத்தில் சிக்கிய கே.பி.என். சொகுசு பஸ் படுக்கை வசதி கொண்டது. அதில் உள்ள இருக்கைகளில் சொகுசான பயணத்துக்காக ஏராளமான பஞ்சுகள் திணிக்கப்பட்டுள்ளன. இதனால் எளிதில் அதில் தீப்பற்றிக் கொண்டுள்ளது. குளிர்சாதன வசதி கொண்ட பஸ் என்பதால் திறக்க முடியாத நிலையில் கண்ணாடிகள் பொருத்தப்பட்டிருந்தன. இதுவும் பயணிகள் தப்பிப்பதற்கு முடியாமல் போய்விட்டது.

தலை-கால் தெரியாத உடல்கள்

விபத்தில் கருகிய 22 பேரின் உடல்களும் வாலாஜா அரசு ஆஸ்பத்திரி வளாகத்தில் வரிசையாக அடுக்கி வைக்கப்பட்டிருந்தது. அந்த உடல்களில் தலைப்பகுதி எது? கால் பகுதி எது? என்று தெரியாத அளவுக்கு சிதைந்து காணப்பட்டது. அந்த பகுதியை சுற்றி வெள்ளை துணியால் போலீசார் கட்டி இருந்தனர். உடல்களை உறவினர்கள் வந்து பார்த்து அடையாளம் காணுவதற்கு வசதியாக இந்த ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

நவரத்தின மாலையால் அடையாளம் தெரிந்தது

விபத்தில் பலியான 22 பேரில் பொள்ளாச்சியை சேர்ந்த வெங்கடேசன் (வயது 70) என்பவரின் உடல்தான் முதன் முதலில் அடையாளம் காணப்பட்டது. தொழில் அதிபரான இவர் பொள்ளாச்சி பஜார் ரோட்டில் சியாமளா என்ற பெயரில் சூப்பர் மார்க்கெட் வைத்து நடத்தி வந்தார்.

முகப்பேரில் உள்ள தனது மகளின் வீட்டு நிகழ்ச்சியில் பங்கேற்று விட்டு திரும்பி சென்றுள்ளார். அப்போதுதான் விபத்தில் சிக்கி உயிர் இழந்துள்ளார். இவர் பயணம் செய்வதற்காக அவரது மகன் செந்தில் டிக்கெட் முன்பதிவு செய்திருந்தார். அதில் தனது போன் நம்பரை கொடுத்துள்ளார்.

விபத்து நடைபெற்றவுடன் கே.பி.என். டிராவல்சில் பயணம் செய்தவர்களின் பட்டியலை சேகரித்த போலீசார் செந்திலின் செல்போனுக்கு தொடர்பு கொண்டு விவரத்தை தெரிவித்தனர். அவர் உடனடியாக சென்னையில் உள்ள தனது மைத்துனர் செல்வராஜுக்கு தகவல் தெரிவித்தார்.

வாலாஜா அரசு ஆஸ்பத்திரிக்கு இன்று காலை வந்த செல்வராஜ் 22 உடல்களையும் ஒவ்வொன்றாக பார்த்து பின்னர் அடையாளம் காட்டினார். வெங்கடேசன் அணிந்திருந்த நவரத்தின மாலையை வைத்து அடையாளம் கண்டுபிடிக்கப்பட்டது. பின்னர் செல்வராஜிடம் வெங்கடேசன் உடல் ஒப்படைக்கப்பட்டது.

No comments: