Wednesday, June 8, 2011

சூரியன் மறைந்தால் மீண்டும் உதிக்கும் - “சி.பி.ஐ. விசாரணையை தயாநிதி மாறனே சந்திப்பார்”.


தி.மு.க.விற்கு தோல்வி என்பது தடை கல் அல்ல. ராஜீவ்காந்தி மறைந்த போது தி.மு.க. மீது பொய் பிரசாரம் கூறப்பட்டதால் அந்த காலக் கட்டத்தில் தி.மு.க. பெருவாரியான இடங்களில் தோல்வியுற்றது. இருந்தபோதிலும் துறைமுகம் தொகுதியில் நான் மட்டும் வெற்றி பெற்றேன்.

அதன் பிறகு படிப்படியாக தி.மு.க. பல இடங்களில் போட்டியிட்டு 185 இடங்களில் வெற்றி பெற்று ஆட்சி அமைத்தது தி.மு.க.தான். சூரியன் மறைந்தால் மீண்டும் உதிக்காது என்று சொல்கிறார்கள். சூரியன் மறைந்தால் மீண்டும் உதிக்கும். வெற்றி தோல்வி இயக்கத்திற்கு மாறி மாறி வருவது இயல்பு.

நீதிக்கட்சி தொடங்கி தி.மு.க. என்ற பெயர் பெற்ற பிறகு முதலில் 15 இடங்களிலும் பின்னர் 50 இடங்களிலும் தொடர்ந்து படிப்படியாக வளர்ந்து தமிழகத்தில் ஆட்சி பிடித்தது. அப்படி வளர்ச்சி பெற்ற தி.மு.க.வை அவ்வளவு எளிதில் யாரும் புறம் தள்ளி விட முடியாது. தி.மு.க. இயக்கம் அல்ல. கட்சி அல்ல. அது இன உணர்வின் அடையாளம்.

பின்னர் கருணாநிதி நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அதன் விவரம் வருமாறு:-

கேள்வி:- கனிமொழிக்கு ஜாமீன் மறுக்கப்பட்டால் அதை எப்படி ஏற்றுக் கொள்வீர்கள்?

பதில்:- அதை எப்படி ஏற்றுக் கொள்ள முடியும்.

கேள்வி:- தயாநிதி மாறன் மீது சி.பி.ஐ. விசாரணை தொடங்கும் என்று கூறியுள்ளதே?

பதில்:- தயாநிதி மாறனே அந்த வழக்கை சந்திப்பதாக சொல்லி இருக்கிறார். அதில் நான் என்ன சொல்வதற்கு இருக்கிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

No comments: