Friday, June 3, 2011

போர்ட்டருடன் கல்லூரி மாணவி காதல் : வீட்டை விட்டு ஓடி வந்தவருக்கு போலீசார் அறிவுரை .


திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே உள்ள கிராமத்தின் ஏழை குடும்பத்தை சேர்ந்த பெற்றோரின் ஒரே மகள் ரேவதி (வயது19). பெயர் மாற்றப்பட்டுள்ளது) இவர்களது குடும்பத்தில் பிளஸ்-2 தேர்ச்சி பெற்று கல்லூரி செல்லும் முதல் பெண் ரேவதி. ரேவதி திருச்சியில் உள்ள பிரபல பெண்கள் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வந்தார்.

இதற்காக மணப்பாறையில் இருந்து பயணிகள் ரெயில் மூலம் திருச்சி ஜங்சன் ரெயில் நிலையம் வருவார். மீண்டும் மாலையில் அதே ரெயிலில் ஊருக்கு செல்வார். உருவத்தில் சிறிய பெண்ணான ரேவதிக்கு ரெயில் நிலையத்தில் ஒரு நாள் கருமண்டபத்தை சேர்ந்த போர்ட்டர் ஒருவர் இருக்கை பிடித்து கொடுத்தார்.

நாளடைவில் தினமும் அவர் “சீட்டு” பிடித்து கொடுப்பதும் ரேவதி சிரமம் இல்லாமல் பயணம் செய்வதும் தொடர்ந்தது. தனக்கு சீட்டு பிடித்து கொடுத்த போர்ட்டர் மீது ரேவதியால் திடீர் பாசம். ஜெயம் படத்தில் ஜெயம்ரவி சதாவை போல... போர்ட்டரை பார்க்காமல் ஒரு நாள்கூட ரேவதியும் இருக்க முடியவில்லை.

அப்போதுதான் ரேவதிக்கு அது எப்ப வரும்? எப்படி வரும்னு தெரியாது ஆனால் வரவேண்டிய நேரத்தில் வந்துவிட்ட காதல் என்று தெரிய வந்தது. இடையில் ரேவதிக்கு பேனா, பென்சில் ரப்பர் என போர்ட்டர் வாங்கி கொடுக்க... ரேவதி அதை வாங்கி போர்ட்டர் நினைவாக பத்திரப்படுத்திக் கொண்டார்.

ஒரு நாள் போர்ட்டர் பேனா நன்றாக எழுதியதா என ரேவதியிடம் கேட்க... ரேவதியோ... அதை உன் நினைவாக... பத்திரமாக வைத்து உள்ளேன் என்றார். போர்ட்டருக்கு ஒன்றும் புரியவில்லை. சிறிது நாட்கள் கழித்து... ரேவதி... போர்ட்டரிடம் “ஐ.லவ்...யூ” சொல்ல... போர்ட்டர்... தண்டவாளத்தை விட்டு... ரெயில் திடீர் என இறங்கியது போல... அதிர்ச்சி அடைந்தார்.

ஆனால் ரேவதியோ... நான் உன்னைதான் திருமணம் செய்ய போறேன்... நாளைக்கு வீட்டை விட்டு ஓடிவந்து விடுகிறேன், மத்திய பஸ் நிலையத்துக்கு வந்துவிடு என்று கண்ணீருடன் கூறிவிட்டார்.

போர்ட்டருக்கு ஒன்றும் புரியவில்லை. மறுநாள் இரவு திருச்சி மத்திய பஸ் நிலையத்தில் வந்து நிற்கிறேன் என கூறி போர்ட்டரை அழைத்தார் ரேவதி... துணிமணியோடு வர... போர்ட்டரோ... அதிர்ச்சியில் வந்து நின்றார். நான் உன்னை காதலிக்கவில்லை என சமாதானபடுத்தினார்.

ஆனால் ரேவதி சமாதானமாகவில்லை. அழத்தொடங்கினார். அந்த நேரம் திருச்சி கண்டோன்மெண்டு மகளிர் போலீசார் கண்களில் ஜோடிபிடிபட்டது. விசாரித்த போது ரேவதியின் ஒரு தலை காதலை போர்ட்டர் கூறி கண்ணீர் வடித்தார். உடனே ரேவதியின் கிராமத்து பெற்றோருக்கு போலீசார் தகவல் கொடுத்து வரவழைத்தனர்.

தங்கள் குடும்பத்தில் முதலில் கல்லூரிக்கு சென்று பெருமை சேர்ப்பாள் ரேவதி என நினைத்தால்... இப்படி ஒருதலை காதலால் கனவை கலைத்துவிட்டாளே... என ஏழை பெற்றோர் கண்ணீர் வடித்தனர்.

ரேவதியிடம் போலீசார் மாயக்காதலை கைவிடு, புத்தகத்தை கையில் எடு... படித்து பெற்றோர் கனவை நினைவாக்கு... என 10 மணி நேரம் அறிவுரை கூறி... பெற்றோருடன் அனுப்பி வைத்தனர். இன்னும் திருச்சி ஜங்சனில் இருந்து புறப்படும் அதே ரெயிலில்தான் ரேவதி செல்கிறார்.

ஆனால்... இப்போது அவருக்கு சீட்டுபிடித்து கொடுக்க... அந்த போர்ட்டர் இல்லை. காதல் கனவு கலைந்துவிட்ட கவலையில் ரேவதி... பெற்றோர் கனவையாவது நிறைவேற்றுவோம்... என... படிப்பில் இறங்கிவிட்டார்.

அதே நேரத்தில்... ஜங்சன் ரெயில் நிலையத்தில்... எந்த பெண்ணாவது ...“சீட்டு” பிடித்து கொடுங்க... என்று... கூறினால்... அந்த போர்ட்டர்... எக்ஸ்பிரஸ் ரெயில் வேகத்தில் எஸ்கேப் ஆகிவிடுகிறார்.

No comments: