Sunday, June 19, 2011

ஸ்ரீரங்கம் கோயிலில் ஜெயலலிதா - படங்கள்.

ஸ்ரீரங்கம் தொகுதியில் தேர்தலில் வெற்றி பெறச்செய்த வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிப்பதற்காக, ஜெயலலிதா 3 நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொள் கிறார். இதற்காக இன்று (19.06.2011) காலை ஜெயலலிதா சென்னையில் இருந்து விமானம் மூலம் திருச்சிக்கு வந்தார்.

திருச்சி விமான நிலையத்தில் அவருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப் பட்டது. பின்னர் அங்கிருந்து கார் மூலம் ஸ்ரீரங்கம் கோயிலுக்கு சென்றார்.







ரெங்கா ரெங்கா கோபுரம் வழியே வந்த ஜெயலலிதாவுக்கு பூரண கும்ப மரியாதை அளிக்கப்பட்டது. கார்த்திகா சன்னதி, கருடாழ்வார் சன்னிதி சென்ற ஜெயலலிதா, பின்னர் கோவிலுக்குள் சென்றார். அங்கு சாமி தரிசனம் செய்த அவர், 14 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள பட்டு வேட்டியை பெருமாளுக்கு சாத்துமாறு அய்யர்களிடம் கொடுத்தார்.



ஸ்ரீரங்கம் கோயிலுக்கு ரூ. 10 லட்சத்தில் 11 பேர், 6 பேர் செல்லும் இரண்டு பேட்டரி காரை சொந்த செலவில் ஜெயலலிதா தானமாக வழங்கினார். மாற்றுத் திறனாளிகள் ஆலயத்தை சுற்றிப் பார்க்க பேட்டரி கார் பயன் படுத்தப்படும்.

பின்னர் கார்த்திகா சன்னதியில் இருந்து உடையவர் சன்னதிக்கு பேட்டரி கார் மூலம் வந்தார். அந்த காரில் கொஞ்ச தூரம் சென்ற அவர் பின்னர் இறங்கினார். பின்னர் வெள்ளை கோபுரம் வழியாக சங்கம் ஓட்டலுக்கு சென்றார்.








நன்றி - நக்கீரன்